புதிய அவதாரம் எடுக்கும் பாடகர் கிரிஷ்!!

நடிகர், பாடகர் என பிரபலமான கிரிஷ் தற்போது புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார்.

Last Updated : Jan 26, 2018, 12:56 PM IST
புதிய அவதாரம் எடுக்கும் பாடகர் கிரிஷ்!! title=

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் ‘மஞ்சள் வெயில் மாலையிலே’ பாடல் பாடி அறிமுகம் ஆனார் பாடகர் கிரிஷ்.

இந்த பாடலை தொடர்ந்து பல பாடல்களை பாடி வந்தார் கிரிஷ். பல பாடல்களை பாடிய இவர் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமார். இதன்பின் சூர்யாவின் ‘சிங்கம் 3’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

நடிகர், பாடகர் என பிரபலமான கிரிஷ் தற்போது இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார். இது குறித்து கிரிஷ கூறியத, இந்த வருடம் இரண்டு, மூன்று படங்களுக்கு இசையமைக்க இருக்கிறேன். படம் பற்றி விவரங்கள் விரைவில் அறிவிக்கிறேன். என்னால் முடிந்தளவிற்கு சிறந்த இசையை உங்களுக்கு தருவேன். எனது இசை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றார்.

Trending News