தை பொங்கல்: ஜன.12 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்..!

2019 பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 12 ஆம் தேதி முதல் புறப்படும் ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியது...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2018, 08:30 AM IST
தை பொங்கல்: ஜன.12 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்..!  title=

2019 பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 12 ஆம் தேதி முதல் புறப்படும் ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியது...! 

தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான தைப் பொங்கல் பண்டிகைநாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். மேலும், தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் இப்பண்டிகை யானது கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ரயில்வே முன் பதிவானது 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும். இந்தாண்டு ஜன.,11 வெள்ளியன்று தைத்திருநாள் கொண்டாட்டம் தொடங்க உள்ளது. ஜன.,13 ல் போகிப்பண்டிகை ,ஜன.,14 திங்களன்று தைப் பொங்கல் ,ஜன.,15 ல் மாட்டுப் பொங்கல் என தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற உள்ளன.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர், வட மாவட்டங்களில் வேலை நிமித்தமாகவும், உயர் கல்விக்காகவும் தங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவ்வாறு, வெளியூரில் வசிக்கும் பலர் தங்களது சொந்த ஊரில் தைத்திருநாளை குடும்பத்துடன் கொண்டாடவே விரும்பு கின்றனர். இதற்காக ரயிலில் முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்வதே ஏராளமானோரின் விருப்பமாக உள்ளது.

தமிழர் திருநாளான தைப் பொங்கல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் வெளியூர்களில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் செல்வது வழக்கம். அவர்கள் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதேபோல் ஜனவரி 13 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமையும், 14ஆம் தேதிக்கான முன்பதிவு ஞாயிற்றுகிழமையும், 15 ஆம் தேதிக்ககான முன்பதிவு திங்கட்கிழமையும் தொடங்கும்.

 

Trending News