Rasipalan October 16: புரட்டாசி 30ம் நாள் ராசிபலன்

சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.   

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 16, 2021, 05:26 AM IST
Rasipalan October 16: புரட்டாசி 30ம் நாள் ராசிபலன் title=

புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.   

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...    

ராசிபலன் - 16-10-2021

மேஷம்: குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்: வியாபார பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கௌரவ பொறுப்புகளின் மூலம் தனவரவுகள் ஏற்படும். மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் புதுவிதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். நன்மை உண்டாகும் நாள்.

Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 அக்டோபர் 16, புரட்டாசி 30ம் நாள், சனிக்கிழமை

மிதுனம்: மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். பெரியோர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் பொருளாதாரமும், மாற்றமான சூழ்நிலைகளும் உண்டாகும். சுகபோகங்கள் அதிகரிக்கும் நாள்.

கடகம்: எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த சில பணிகள் காலதாமதமாக நிறைவுபெறும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சாதகமற்ற நாள்.

சிம்மம்: வியாபார பணிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் நபர்களின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். பலவிதமான குழப்பங்களிலிருந்து தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் லாபம் அடைவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைந்த நாள்.

கன்னி: உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். வேகத்தைவிட விவேகமான சிந்தனைகள் நன்மையை ஏற்படுத்தும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். எதிர்பார்த்த சில பொறுப்புகளும், உயர் பதவிகளும் கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். திடீர் மாற்றங்கள் உண்டாகும் நாள்.

ALSO READ | அன்னதானத்தின் சிறப்புகளும் தான வீரன் கர்ணனின் கொடையும்

துலாம்: பூர்வீக சொத்துக்களின் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு உண்டாகும். நுணுக்கமான சில விஷயங்களின் மூலம் தனவரவுகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு மந்தத்தன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இனம்புரியாத எண்ணங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுமையான நாள்.

விருச்சிகம்: அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வாகனப் பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். ஆதரவு கிடைக்கும் நாள்.

ALSO READ | தசராவிற்கு 21 நாட்களுக்கு பிறகு தீபாவளி வருவதன் காரணம் இதுவே!

தனுசு: திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். தாயாரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் வழியில் சாதகமான சூழல் உண்டாகும். விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இசை சார்ந்த பணிகளில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்: தவறிய சில பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு வருவாய்களையும் பாதுகாப்பது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.

மீனம்: செய்யும் முயற்சிகளில் புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவங்களை பெறுவீர்கள். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவ்வப்போது பழைய சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.

ALSO READ | குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? எதை தவிர்க்க வேண்டும்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News