Rasipalan October 17: புரட்டாசி 31ம் நாள் ராசிபலன்

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 17, 2021, 06:43 AM IST
Rasipalan October 17: புரட்டாசி 31ம் நாள் ராசிபலன் title=

புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.   

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...    

ராசிபலன் -  17-10-2021

மேஷம்: குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரிய செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். அமைதியான நாள்.

ரிஷபம்: மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலை மற்றும் முயற்சிகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். உயர்வு உண்டாகும் நாள். 

ALSO READ | தசராவிற்கு 21 நாட்களுக்கு பிறகு தீபாவளி வருவதன் காரணம் இதுவே!

மிதுனம்: வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நம்பிக்கை உண்டாகும் நாள்.

கடகம்: உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். தம்பதிகளுக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும். முன்கோபமின்றி சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்: மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

கன்னி: உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

ALSO READ | அன்னதானத்தின் சிறப்புகளும் தான வீரன் கர்ணனின் கொடையும்

துலாம்: உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். அனுபவம் உண்டாகும் நாள்.

விருச்சிகம்: பேச்சுக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தன, தான்ய விருத்திக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படும் நாள்.

தனுசு: வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆதாயம் மேம்படக்கூடிய நாள்.

Also Read | பஞ்சாங்கம்: 2021 அக்டோபர் 16, புரட்டாசி 30ம் நாள், சனிக்கிழமை

மகரம்: வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதுவிதமான நாள்.

கும்பம்: ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் உண்டாகும். மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். சிந்தனைகள் உண்டாகும் நாள்.

மீனம்: எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதத்திற்கு பின்பே கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு சார்ந்த பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். நன்மை உண்டாகும் நாள்.

ALSO READ | குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? எதை தவிர்க்க வேண்டும்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News