பங்கு சந்தை முதலீட்டில் ஆயிரத்தை கோடிகளாக்க வேண்டுமா... சில முதலீட்டு டிப்ஸ்!

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பங்கு சந்தை வல்லுநர்கள் கடைபிடித்த டிப்ஸ்களை  அறிந்து கொண்டால் நாமும் பங்கு சந்தையில் முதலீடு செய்து பணக்காரர் ஆகலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 17, 2023, 08:21 PM IST
  • நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டால், அது உங்களுக்கு நல்ல வருமானத்தைத் தரும் என நிச்சயமாக கூறி விட முடியாது.
  • நிறுவனத்தின் கடன் குறித்த விபரம்.
  • மற்றவர்களைப் பார்த்து பணத்தை முதலீடு செய்யக் கூடாது
பங்கு சந்தை முதலீட்டில் ஆயிரத்தை கோடிகளாக்க வேண்டுமா... சில முதலீட்டு டிப்ஸ்! title=

பங்குச் சந்தை என்பது பங்குச் சந்தைகள், நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பங்குகள், பரஸ்பர நிதியங்கள் போன்ற பல்வேறு பத்திரங்களை வாங்க அல்லது விற்க வேண்டிய ஒரு தளமாகும். இதில் மிகவும் சிந்தித்து, முதலீடு செய்தால் ஆயிரத்தை கோடிகளாக்கலாம்.

1. நீண்ட கால முதலீடு

பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் நீண்ட கால முதலீடு செய்வது தான் நல்லது. குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுவதை விட, முதலீடு பன்மடங்கு வளர கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறிகின்றனர். சந்தையில் பணம் முதிர்ச்சியடைவதற்கு நேரம் கொடுக்க வேண்டியது அவசியம். சந்தையில் கொஞ்சம் காத்திருந்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.

2. அனைத்து மூலதனத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யக் கூடாது

முதலீடு செய்ய வேண்இய பணத்தை ஒரே நேரத்தில் சந்தையில் போடக் கூடாது. முதலீடு செய்ய அதிக அளவில் பணம் இருந்தாலும், பணத்தையும் சேர்த்து ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீர்கள். லாபம் சம்பாதிக்க ஆசை இருப்பது நல்லது, ஆனால் ஒரு சிறிய அளவிலான முதலீடு மட்டுமே சிறந்த வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். ஏதேனும் ஒரு பங்கில் பணத்தை முதலீடு செய்யும் போது, ​​உங்கள் முதலீட்டுத் தொகையை பகுதிகளாகப் பிரித்து அவ்வப்போது வாங்குவதே சிறந்தது.

மேலும் படிக்க | PPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி: நினைத்தது நடக்கவில்லை!!

3. நிறுவனத்தின் கடன் குறித்த விபரம்

நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தில் எவ்வளவு கடன் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். பணத்தை முதலீடு செய்யும் முன் கண்டிப்பாக அந்த நிறுவனத்தின் கடனைத் தெரிந்துகொள்ளுங்கள். பங்குச் சந்தையில், நிறுவனங்கள் மீது எவ்வளவு கடன் உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். கடன் குறைவாக இருந்தால், நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாது. ஆனால், கடன் அதிகமாக இருந்தால், நிறுவனத்தின் மதிப்பீடு எந்த நேரத்திலும் ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.

4.  நிறுவனத்தின் நிதி நிலை

பங்குச் சந்தையில் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டால், அது உங்களுக்கு நல்ல வருமானத்தைத் தரும் என நிச்சயமாக கூறி விட முடியாது. அத்தகைய சூழ்நிலையில், முதலீடு செய்வதற்கு முன் நிறுவனத்தின் பின்னணி சரிபார்ப்பு அவசியம். நிறுவனம் எவ்வளவு ஈவுத்தொகை கொடுத்துள்ளது என்பதை கண்டிப்பாக பாருங்கள். பங்குச் சந்தையில் ஈவுத்தொகைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நிறுவனம் நீண்டகாலமாக டிவிடெண்ட் செலுத்தி வருகிறது என்றால், அந்த நிறுவனத்திற்கு பணப் பற்றாக்குறை இல்லை என்று அர்த்தம்.

5. மதிப்பில் கவனம் செலுத்துங்கள், விலையில் அல்ல

நிறுவனத்தின் பங்குகளின் விலையைப் பார்த்து முதலீடு செய்யக் கூடாது. அதிக விலையுள்ள பங்கு அதிக வருமானம் தர வேண்டும் என்பது அவசியமில்லை. நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தின் மதிப்பைப் பார்க்கவும், அதன் பங்கு விலையை அல்ல. பெரும்பாலும் மக்கள் அதிக விலையுள்ள பங்குகளை வாங்கி தவறு செய்கிறார்கள், அவர்கள் அதன் கடந்தகால செயல்திறனைப் பார்க்க நினைப்பதில்லை. இதை ஒருபோதும் செய்யக்கூடாது.

6. மற்றவர்களைப் பார்த்து பணத்தை முதலீடு செய்யக் கூடாது

மற்றவர்களைப் பார்த்து பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பானது அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இங்கே வருமானம் அதிக அளவில் இருக்கும். அதனால் ஆபத்தும் அதிகம். எனவே, மற்றவர்களைப் பார்த்து முதலீடு செய்யாமல், அந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு, அதன் பிறகு முதலீடு செய்ய வேண்டும். மற்றவர்களைப் பார்த்து பணத்தை முதலீடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும், ஏனென்றால் எதிரில் இருப்பவர்  பண பலம் கொண்டவராக இருக்கலாம்;  அவர் நஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் நிலையில் இருக்கலாம், ஆனால் குறைந்த மூலதனம் உள்ளவர்களுக்கு நஷ்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மேலும் படிக்க | Post Office Scheme: தபால் அலுவலகத்தில் ஏதேனும் திட்டத்தில் சேர்வதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News