ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 1.80 லட்சம் வழங்கும் அரசு? உண்மை என்ன?

பிரதான் மந்திரி கன்யா ஆசிர்வாத் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெற்றோருக்கும் மத்திய அரசு ரூ.1,80,000 வழங்குவதாக யூடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 14, 2023, 01:51 PM IST
  • 'கவர்ன்மென்ட் கியான்' என்கிற யூடியூப் சேனலில் போலியான தகவல் பரப்பப்பட்டுள்ளது.
  • பிரதான் மந்திரி கன்யா ஆசிர்வாத் யோஜனா என்று எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தவில்லை.
  • பிஐபி அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உண்மையை கூறியுள்ளது.
ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 1.80 லட்சம் வழங்கும் அரசு? உண்மை என்ன? title=

மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மூலம், மக்கள் பல்வேறு சலுகைகள், மானியங்கள் மற்றும் அவர்களின் கணக்குகளில் பணம் பெறுகிறார்கள்.  இருப்பினும் சமூக ஊடகங்களில் அடிக்கடி பல நலத்திட்டங்கள் குறித்து போலியான தகவல்கள் பரப்பப்பட்டு மக்களை ஏமாற்றும் வேலைகள் சில நடந்து வருகிறது. மெசேஜ்கள் மூலம் தவறான இணைப்புகளை அனுப்பி பணம் பறிப்பது, ஓடிபி கேட்டு அதன் மூலம் பணத்தை பறிப்பது போன்ற மோசடிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், சமூக ஊடகங்களில் நலத்திட்டங்கள் குறித்து பல போலியான செய்திகளும் பரப்பப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 ஜாக்பாட் அறிவிப்புகள்!! 

சமீபத்தில் யூடியூப்பில், பிரதான் மந்திரி கன்யா ஆசிர்வாத் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெற்றோருக்கும் மத்திய அரசு ரூ.1,80,000 வழங்குவதாக ஒரு வீடியோ மூலம் கூறப்பட்டது. இந்தத் தொகை பெண் குழந்தையின் பெற்றோரின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றும் அந்த வீடியோவில் கூறப்பட்டு இருக்கிறது.  இந்த வீடியோவை பதிவேற்றிய சேனல் பெயர் கவர்ன்மென்ட் கியான், ஆனால் தற்போது இந்த தகவல் போலியானது என்பது தெரியவந்துள்ளது.  அரசாங்கத்தின் நோடல் ஏஜென்சியான பிஐபி-ன் உண்மைச் சரிபார்ப்புத் துறை இதன் உண்மை தன்மையை கண்டறிந்துள்ளது, இதுகுறித்து பிஐபி கூறுகையில் வீடியோவில் கூறப்பட்டுள்ள உரிமைகோரல்களுக்கு எந்த நம்பகத்தன்மையும் இல்லை என்றும் வீடியோ போலியானது என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசு பிரதான் மந்திரி கன்யா ஆசிர்வாத் யோஜ்னா என்கிற எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், இத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கு எந்த உதவியும் வழங்கப்படுவதில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  இதுகுறித்து பிஐபி அதன் ட்விட்டர் பக்கத்தில், 'பிரதான் மந்திரி கன்யா ஆஷிர்வாத் யோஜனா' திட்டத்தின் கீழ் அனைத்து மகள்களுக்கும் மத்திய அரசு ரூ. 1,80,000 ரொக்கமாக வழங்குவதாக 'கவர்ன்மென்ட் கியான்' என்கிற யூடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது போலியான வீடியோ' என்று ட்வீட் செய்துள்ளது.

மேலும் படிக்க | அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு! எப்போது இருந்து தெரியுமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News