அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ம் தேதி ஜல்லிக்கட்டு

Last Updated : Jan 24, 2017, 11:26 AM IST
அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ம் தேதி ஜல்லிக்கட்டு  title=

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று விழாக்கமிட்டியினர் அறிவித்துள்ளனர்.

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு நிரந்தர சட்டம் கொண்டு வந்தது. 

இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது. இந்தநிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பிப்பரவரி 5-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 400 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள் என விழா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ம் தேதியும், பால மேட்டில் 2-ம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.

Trending News