நடிகை கஸ்தூரி போட்ட ட்விட்டால் போலீசில் புகார்!

நடிகை கஸ்தூரி, சாதி கலவரத்தை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Last Updated : Mar 5, 2018, 03:34 PM IST
நடிகை கஸ்தூரி போட்ட ட்விட்டால் போலீசில் புகார்!  title=

நடிகை கஸ்தூரி, அண்மை காலமாக டுவிட்டரில் சினிமா, அரசியல், சமூக சார்ந்த விஷயங்கள் குறித்து பதிவிட்டு கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. 

நடிகை ஸ்ரீதேவி மறைவின்போது, "அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் மறைந்த ஸ்ரீதேவியின் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஒருநாள் பாலிவுட் நடிகை சன்னி லியோன் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என கவலைப்படுகிறேன்" என்று கூறியிருந்தார். இந்த பதிவை முகநூலில் இருந்து எடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனாலும் இவரது பதிவுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கஸ்தூரி மீது சமூகநீதி சத்ரிய பேரவை தலைவர் பொன்குமார் புகார் அளித்துள்ளார். சாதி கலவரத்தை தூண்டும் வகையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துக்கள் பதிவிடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Trending News