அழகிய குரலுக்கு சொந்தக்காரர் யார்? தீபாவை கண்டுபிடிப்பானா கார்த்திக்?

Zee Tamil TV: வெளியே வந்த ரகசியம்.. கார்த்தியிடம் சிக்கிய ரூபஸ்ரீ.. தீபாவுக்கு ஷாக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 22, 2023, 12:28 PM IST
  • ரூப ஸ்ரீக்காக பாட தொடங்கிய தீபா
  • மரத்தடியில் தியானம் செய்யும் சித்தர்
  • கார்த்திக்கின் தேடல் நிறைவேறுமா?
அழகிய குரலுக்கு சொந்தக்காரர் யார்? தீபாவை கண்டுபிடிப்பானா கார்த்திக்? title=

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (Zee Tamil TV) திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் ஒரு சிலவற்றை மட்டுமே ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். அப்படி ரசிகர்கள் பலர் விரும்பி பார்க்கும் சீரியல்களுள் ஒன்று, கார்த்திகை தீபம்.

ஜீ தமிழ் தொலைகாட்சியில் இந்த தொடர் முதல் எபிசோடில் இருந்து தற்போது வரை பல விருவிருப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. இன்றைய எபிசோடிலும் இதில் பல சம்பவங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாமா? நேற்று கச்சேரியில் கார்த்திக் போன் பேசப்போன சமயத்தில் தீபா ரூமுக்குள் சென்று ரூப ஸ்ரீக்காக பாட தொடங்குகிறான்.

அங்கே கோவிலில் மரத்தடியில் உட்கார்ந்து சித்தர் ஒருவர் தியானம் செய்து கொண்டிருக்க அவர் கையில் இருந்த பொருள் ஒன்று கீழே விழ கார்த்திக் அதை எடுத்து கொடுக்கிறான். 

மேலும் படிக்க | என்னை ஏற்றுக் கொள் என கெஞ்சும் கார்த்திக்! முடிவு என்னிடம் இல்லை யமுனா பதில்

உடனே கண்விழித்த சித்தர் உன்னுடைய வாழ்க்கையில் புரியாத புதிராக இருக்கும் பல விஷயங்களுக்கு பதில் கிடைக்கப் போகிறது என்று சொல்ல கார்த்திக் குழப்பம் அடைகிறான். அடுத்ததாக உள்ளே வரும் கார்த்திக் தீபா குறித்து விசாரிக்க மைதிலி பிரண்டை பார்த்து வர சென்றிருப்பதாக சொல்லி சமாளிக்கிறாள். 

இங்கே ப்ளூடூத் வொர்க் ஆகாததால் ஒயர் மை போட்டு தீபா பாடிக்கொண்டிருக்க கார்த்திக்கு திரும்பவும் ஒரு போன் கால் வர அவன் வெளியே செல்லாமல் ஸ்டேஜுக்கு பின்புறம் வருகிறான். அப்போது ஸ்டேஜில் இருந்து இன்னொரு ரூமுக்கு ஏதோ ஒரு ஒயர் செல்வதை பார்த்து தேடிச் செல்ல ரூமுக்குள் ஒரு பெண் பாடுவது தெரிய வருகிறது. ரூபஸ்ரீ வாய் மட்டும்தான் அசைக்கிறாள் என்ற விஷயத்தையும் கார்த்திக் கண்டுபிடிக்கிறான். 

இந்த அழகிய குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பதை தெரிந்து கொள்ள கார்த்திக் ரூமுக்கு நுழைய தீபா ஒளிந்து கொள்கிறாள். அவசரத்தில் அவளது கால் செயின் ஒன்று கழண்டு விழ கார்த்திக் அதை வைத்து ரூமுக்குள் பாடியது யார் என்பதை கண்டுபிடிக்க முடிவு செய்கிறான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தமிழா தமிழா மேடையை மிரள வைத்த சிறுவன்! வைரலாகும் புதிய ப்ரமோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News