#VjChitra: பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தற்கொலைக்கு காரணம் என்ன?

சித்ராவின் மரணம தொடர்பாக கணவர் ஹேமந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்ப காவல்துறையினர் முடிவு செய்திருக்கின்றனர். சித்ரா யாருடன் தொலைபேசியில் பேசினார் என்ற விசாரணையும் தொடர்கிறது. இன்று காலை 10 மணிக்கு உடல்கூறாய்வு பரிசோதனை நடைபெறும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2020, 03:32 PM IST
  • பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர்
  • நடிகை சித்ரா என்பதைவிட முல்லை என கதாபாத்திரத்தின் பெயரால் பிரபலமானவர்
#VjChitra: பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தற்கொலைக்கு காரணம் என்ன? title=

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைகாட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றவர். சென்னை நசரேத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா அங்கு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த செய்தி வெளியாகி சின்னத்திரை உலகையே உலுக்கிவருகிறது.

இந்த நிலையில், சித்ராவின் மரணம் தொடர்பாக கணவர் ஹேமந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்ப காவல்துறையினர் முடிவு செய்திருக்கின்றனர். சித்ரா யாருடன் தொலைபேசியில் பேசினார் என்ற விசாரணையும் தொடர்கிறது. சித்ராவின் நட்பு வட்டத்தில் இருந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்களும் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வருகின்றனர்.  இன்று காலை 10 மணிக்கு உடல்கூறாய்வு பரிசோதனை நடைபெறும். 

Also Read | #VjChitraவை கொன்றது கணவர் ஹேமந்த்.. பரபரப்பை ஏற்படுத்திய அம்மா

ஹேமந்த் ரவி என்ற தொழிலதிபருடன் சித்ராவுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. இருவரும் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் சித்ரா (Actress chitra).  திருவான்மியூர் பகுதியில் வசித்துவருகிறார் சித்ரா. சென்னை புறநகர் பகுதியில் படபிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. எனவே, சென்னை, நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார் சித்ரா. அவருடன், ஹேமந்தும் தங்கியிருந்தார்.

சித்ராவுக்கு, 4 மாதங்கள் முன்பு ஹேமந்த்துடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவரும் இந்த ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்துள்ளார். நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சூட்டிங் (Serial shooting) முடிந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார் சித்ரா.

Also Read | #VjChitra: முல்லையாக மலர்ந்து ஹோட்டலில் மலராக வாடிய சித்ரா in pics

ஹோட்டலுக்கு வந்தவுடன் தான் குளிக்கப்போவதாக சொல்லிவிட்டு, ஹேமந்தை வெளியே நிற்கவைத்து விட்டு அறையின் கதவை மூடிக் கொண்டார். ஹேம்நாத் அறையின் வெளியே நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார். பிறகு கதவை தட்டியபோது பதில் ஏதும் வரவில்லை.

எனவே ஹேமந்த் மாற்று சாவி கொண்டு திறந்து உள்ளே போய் உள்ளார். அங்கு சித்ரா புடவையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். உடனே அவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். ஹோட்டலுக்கு விரைந்த போலீசார்(police), சித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சித்ரா கலகலப்பானவர், அனைவருடனும் சுமூகமாகவும், நட்புடனும் பழகுபவர். தைரியமானவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த கொரோனா காலகட்டத்தில் அனைவரும் லாக்டவுனில் வீட்டில் இருந்தபோது, சமூக ஊடகங்கள் டப்-மேஷ் மூலமாக அவர் மிகவும் சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். சித்ராவின் மரணம் சின்னத்திரை முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது டிவிட்டர் பக்கத்தில் இருந்து அவரது நேர்மறையான சிந்தனைகள் தெரிகிறது. 

சித்ரா தற்கொலை தொடர்பாக ஹோட்டல் நிர்வாகிகள், ஹேமந்த் என பலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். சித்ராவின், தொலைபேசி உரையாடல்கள், மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யப்படும். தொழில்முறையில் சித்ராவுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்ததா, அவருக்கு யாராவது மிகவும் அழுத்தம் கொடுத்தார்களா என்பது போலீசார் விசாரணையில் தெரியவரும்.  

இதனிடையில் ஹேமந்திடம் விசாரித்தபோது சில அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னதாக, சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்றுவிட்டதாக அவர் கூறினார். ஜனவரி மாதத்தில் பெரிய அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர். இந்த நிலையில் சித்ராவின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. 

மிகவும் தைரியமான பெண் சித்ரா, எந்தவொரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்பவர் என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கூறுகின்றனர். பதிவுத் திருமணம் நடைபெற்றது உண்மை என்றால், திருமணமான இரண்டு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால், மரணத்திற்கு காரணம் குடும்ப வன்முறையா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.  அதோடு, சித்ராவின் உடலில் ரத்த காயம் இருப்பதும் சந்தேகங்களை எழுப்புகிறது. 

பாலிவுட்டில் நடிகர் சுஷாந்த் ராஜ்புத்தின் மரணம் இந்த ஆண்டில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சர்ச்சைகளையும் எழுப்பியது. அதேபோல், சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கும் பல்வேறு திருப்பங்களை காணுமோ என்று தோன்றுகிறது.

Also Read | இணையத்தை கலக்கும் லேடி சூப்பர் ஸ்டாரின் லேடஸ்ட் புகைப்படம்!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News