சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ நிலையம், சுகாதார பாதுகாப்பு திட்டம்

சிங்கப்பூரில் பணிபுரியும் அயல் நாட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வெளிநாட்டு பணியாளர்களுக்கான சுகாதார முதன்மை பாதுகாப்பு திட்டத்தை சிங்கப்பூர் அரசு சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 4, 2022, 02:11 PM IST
  • சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் புதிய மருத்துவ நிலையம் ஒன்றின் மூலம் பயனடைய உள்ளனர்.
  • வெளிநாட்டு பணியாளர்களின் உடல்நலப் பாதுகாப்புச் செலவுகளை ஈடுகட்ட இந்த திட்டம் உதவும்.
  • ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ நிலையம், சுகாதார பாதுகாப்பு திட்டம்   title=

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பணிபுரியும் அயல் நாட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வெளிநாட்டு பணியாளர்களுக்கான சுகாதார முதன்மை பாதுகாப்பு திட்டத்தை சிங்கப்பூர் அரசு சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது. அங்குள்ள 370,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களில் 10-ல் நான்கு பேர் இந்த முதன்மை பாதுகாப்பு திட்டத்தில் (PCP) சேர்ந்துள்ளனர். வெளிநாட்டு பணியாளர்களின் உடல்நலப் பாதுகாப்புச் செலவுகளை ஈடுகட்ட உதவும் இந்த திட்டம் ஏப்ரல் மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டது. 

வெள்ளியன்று (ஜூன் 3) PCP-யின் முன்னேற்றம் குறித்த புதுப்பிப்பை வழங்கிய சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டான் சீ லெங், திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள், இதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சுகாதாரக் குழுவால் கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறினார். 

"இது வலுவான மருத்துவர்-நோயாளி உறவுகளை உருவாக்குகிறது.மேலும் நீண்ட காலத்திற்கு சிறந்த ஆரோக்கிய விளைவுகளை அடையும் நோக்கில் இந்த திட்டம் உருவாகியுள்ளது." என்றார் அவர்.

கடந்த நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட PCP திட்டம் வெளிநாட்டு ஊழியர்களின் பெரும்பாலான ஆரம்ப சுகாதாரத் தேவைகளுக்கான செலவை ஈடுசெய்யும். இதில் பணி அனுமதி தேவைகளுக்கான மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள், வருடாந்திர சுகாதார பரிசோதனைகள் மற்றும் டெலிமெடிசின் ஆகியவை அடங்கும்.

ஒரு PCP இன் விலை ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு $108 முதல் $138 வரை இருக்கும். இந்த தொகையை புலம்பெயர்ந்த தொழிலாளிகள் வசிக்கும் பகுதிக்கு பொறுப்பான சுகாதார வழங்குநருக்கு வழக்கமான மாத தவணைகளில் செலுத்தலாம்.

ஏப்ரல் முதல், கட்டுமானம், கடல்சார் மற்றும் செயல்முறைத் துறைகளில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கான பிரத்யேக இடங்களில் வசிப்பவர்களுக்கும் முதலாளிகள் PCP-ஐ வாங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுள்ளது. அத்தகைய தொழிலாளர்கள் 370,000 பேர் உள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவர்களது முதலாளிகள் திட்டங்களை வாங்கலாம்.

மேலும் படிக்க | இதையெல்லாம் செய்யக்கூடாது: முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த சவூதி அரேபியா 

வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான இரண்டாவது அமைச்சராகவும் இருக்கும் டாக்டர் டான், வெள்ளிக்கிழமை மாலை ஃபாரர் பூங்காவில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஸ்டார்மெட் மருத்துவ மையத்தின் திறப்பு விழாவில் பேசினார்.

வெளிநோயாளர் StarMed சிறப்பு மையத்தில் அமைந்துள்ள StarMed மையம், சிங்கப்பூரின் மத்திய-கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 43,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுகாதார கவனிப்பை வழங்கும்.

பிசிபி திட்டம் சிங்கப்பூரை ஆறு துறைகளாகப் பிரித்து ஒவ்வொரு துறையிலும் வாழும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக ஒரு பிராந்திய மருத்துவ மையத்தை நியமிக்கிறது.

நான்கு "ஆங்கர் ஆபரேட்டர்கள்" ஆறு மையங்களை நடத்துகின்றனர். தொண்டு நிறுவனமான சாடா காம்ஹெல்த் (Sata Commhealth) மூன்று மையங்களை நடத்துகிறது. ஸ்டார்மெட் (StarMed) ஸ்பெஷலிஸ்ட் சென்டர், ஃபுல்லர்டன் ஹெல்த்கேர் குரூப் மற்றும் செயின்ட் ஆண்ட்ரூஸ் மிஷன் மருத்துவமனை ஆகியவை தலா ஒரு மையத்தை இயக்குகின்றன. ஆறு நிறுவனங்களும் ஏப்ரல் முதல் செயல்பாட்டில் உள்ளன.

StarMed மையத்தில் ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கான ஆறு அறைகள் , காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கு தனித்தனியாக காத்திருக்கும் இடங்களும் ஆகிய வசதிகள் உள்ளன. 14 ஊழியர்களைக் கொண்ட இந்த மையத்தில் ஒவ்வொரு நாளும் 40 முதல் 50 நோயாளிகள் வருகிறார்கள். இதுவரை மொத்தமாக இங்கு  1,500 பேர் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக வந்துள்ளனர். 

StarMed ஸ்பெஷலிஸ்ட் சென்டரின் அதே இடத்தில் இதுவும் அமைந்திருப்பதால், StarMed வழங்கும் முதன்மை பராமரிப்புத் திட்டத்தின் எல்லைக்கு அப்பால் பராமரிப்புச் சேவைகள் தேவைப்படும் தொழிலாளர்கள் ஒரே இடத்தில் வசதியாக சிறப்புப் பராமரிப்பு அல்லது அதனுடன் தொடர்புடைய சுகாதாரச் சேவைகளைப் பெறலாம் என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.

அவரது மருத்துவப் பயிற்சியின் போது அவருக்குக் கற்பித்த பேராசிரியர்களின் கருத்துகளை மேற்கோள் காட்டி, டாக்டர் டான், "மருத்துவர்கள் முடிந்தவரை குணப்படுத்துவோம், ஆனால், எப்போதும் நிவாரணம் அளிப்போம், ஆறுதல் அளிப்போம்" என்றார். மருத்துவத்துடன் இந்த ஆறுதலும் அக்கறையும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு மிகவும் தேவையானவை ஆகும். 

இந்தத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் சுகாதாரக் கல்வி, தடுப்பு சுகாதார சேவைகள் மற்றும் கடுமையான மற்றும் நாள்பட்ட நிலைமைகளுக்கான கவனிப்பு ஆகியவை வழங்கப்படும். 

பராமரிப்பு நடவடிக்கைகளில் மொழி மற்றும் கலாச்சாரத் தடைகளைக் குறைக்க, தொழிலாளர்களின் கலாச்சாரப் பின்னணியைப் புரிந்துகொண்டு அவர்களின் சொந்த மொழிகளைப் பேசும் சுகாதாரப் பணியாளர்களையும் உள்ளூர் சுகாதாரக் குழுக்களில் மையம் சேர்க்கும். 

ஸ்டார்மெட் ஸ்பெஷலிஸ்ட் சென்டர் தலைமை நிர்வாகி லூயிஸ் டான் கூறுகையில், முதன்மை பராமரிப்பில் காணப்படும் வெளிநாட்டு ஊழியர்களில் 2 சதவீதம் பேருக்கு சிறப்பு கவனம் தேவைப்படலாம். ஆனால் அவர்களில் கால் பகுதிக்கும் குறைவானவர்கள்தான் இறுதியில் ஒரு நிபுணரைப் பார்க்கிறார்கள் என்றார்.

இந்த மையம் PCP இல் உருவாக்கப்படும் ஒரு பைலட் ஸ்பெஷலிஸ்ட் கேர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் இதுவரை பத்து முதலாளிகள் சேர்ந்திருக்கிறார்கள். 

சிக்கலான மருத்துவப் பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே சிகிச்சையளிப்பது விலையுயர்ந்த மற்றும் நேரத்தைச் செலவழிக்கும் செயல்முறைகளை தவிர்க்க உதவுகிறது. இப்படி செய்வது தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நிறுவனங்களின் உற்பத்தித்திறனில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | பயணிகள் ஹேப்பி: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பால் மகிழ்ச்சி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News