கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரு ஜபமாலை, திருச்சிலுவை பாதை, தியானம், நற்கருணை ஆராதனை ஆகியவை நடைபெறுகிறது. அந்தோனியார் கோயில் திருவிழாவில் 2,193 இந்திய பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 3, 2023, 07:54 PM IST
  • மின் அலங்காரத்துடன் கூடிய தேரில் அந்தோனியாரின் வீதியுலா.
  • வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் ராமேஸ்வரம் துறைமுகத்தில் கூடினர்.
  • இலங்கை கடற்படை, ராணுவத்தினர் இணைந்து பக்தர்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! title=

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரு ஜபமாலை, திருச்சிலுவை பாதை, தியானம், நற்கருணை ஆராதனை ஆகியவை நடைபெறுகிறது. அந்தோனியார் கோயில் திருவிழாவில் 2,193 இந்திய பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக புனித அந்தோணியார் திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இன்று மாலை 5 மணிக்கு  அந்தோணியார் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் தமிழகம் மற்றும் இலங்கையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணி துவங்கி வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் ராமேஸ்வரம் துறைமுகத்தில் கூடினர். பின் கச்சத்தீவிற்கு பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்பட்ட படகின் வரிசைப்படி பக்தர்கள் சோதனை செய்யப்பட்டு படகுகளில் புறப்பட்டு சென்றனர்.

இரவு 7 மணிக்கு மின் அலங்காரத்துடன் கூடிய தேரில் அந்தோனியாரின் வீதியுலா நடைபெற உள்ளது. நாளை காலை இலங்கை ஆயர்கள் நடத்தும் ஆராதனை நிகழ்வில் சிங்கள மொழியில் கூட்டுப்பிரார்தனை நடைபெற உள்ளது. நாளை காலை 7.30 மணிக்கு திருவிழா நிறைவாக திருச்செப மாலையும், திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறும்.

மேலும் படிக்க | துருக்கி, சிரியா நிலநடுக்க நிவாரணத்திற்காக ரூ.11 கோடி நன்கொடை அளித்த என்ஆர்ஐ தொழிலதிபர்

இந்த திருவிழாவை முன்னிட்டு அங்கு இலங்கை அரசு ஏற்பாட்டில் இலங்கை கடற்படை மற்றும் ராணுவத்தினர் இணைந்து தீவில் இருநாட்டு பக்தர்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் கச்சத்தீவை சுற்றி ஏராளமான ரோந்து கப்பல்களையும் பாதுகாப்பிற்காக இலங்கை கடற்படை நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் படிக்க | துபாய் வாசிகளுக்கு ஒரு நல்ல செய்தி: இனி 24 மணி நேரத்தில் இது கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News