தனுஷ்கோடிக்கு வந்த ஈழத்தமிழர்களை அகதி முகாமில் தங்க வைத்த கடலோர காவல் படை

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அங்குள்ள மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதை அடுத்து, ஈழத்தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 5, 2022, 04:42 PM IST
தனுஷ்கோடிக்கு வந்த ஈழத்தமிழர்களை அகதி முகாமில் தங்க வைத்த கடலோர காவல் படை title=

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால், காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து வாங்க வழியின்றி அங்குள்ள மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதை அடுத்து, இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந் நிலையில், அகதிகளாக இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்கு செல்லும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தி கைது சம்பவமும் நடைபெற்று வருகிறது.

அங்குள்ள மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் , தங்களது எதிர்ப்பை தெரிவித்த அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது புதிய ஆட்சியும் நடந்து வருகிறது. ஆனால், இன்னும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.

மேலும் படிக்க | முல்லைத்தீவு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைப்படகுகள்; எதிர்க்கும் இலங்கை மீனவர்கள்

இந்த நிலையில் இன்று, இரண்டு குடும்பத்தை மூன்று குழந்தை உட்பட எட்டு பேர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வாழ வழியின்றி கடலில் ஆபத்தான முறையில் பயணம் செய்து தனுஷ்கோடி அரிச்சல்முனையில் வந்திருக்கினர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையை சேர்ந்த லவேந்திரன் (24), சசிகலா (24), செல்வராஜா விஜயேந்திரன் (33), கமலராணி (42), ஜங்கரன் (19), ஸ்ரீராம் (14), நிலானி (09), கதிர் (02), இரண்டு குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் வந்தனர். 

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தனுஷ்கோடி பகுதியை சேர்ந்த மீனவர்கள், அகதிகள் அங்கு தவித்துக் கொண்டிருந்ததை பார்த்த பின்பு கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவர்களை மீட்டு தனுஷ்கோடி கடலோர காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், விசாரணைக்கு பின்னர் எட்டு பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.

இதுவரை இலங்கையில் இருந்து அகதிகளாக 28 குடும்பத்தைச் சேர்ந்த 105 பேர் தமிழகம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சட்டவிரோதமாக, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற 51 இலங்கையர்கள் கைது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News