7th Pay Commission: ஜூலை 1 முதல் ஊழியர்களின் சம்பளம் 4% வரை உயர வாய்ப்பு!

7th Pay Commission: மத்திய அரசு சமீபத்தில் அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்திய நிலையில், தற்போது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மீண்டும் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உயர்த்தப்போவதாக கூறப்படுகிறது.

 

1 /5

பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை என ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய இரண்டு மாதங்களில் முறையே அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் திருத்தப்படுகிறது.  

2 /5

விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உயர்த்தக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.  இது ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.   

3 /5

கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்தது.  இந்த டிஏ திருத்தம் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்தது.  

4 /5

இதற்கு முன், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது, இந்த அகவிலைப்படி திருத்தம் ஜூலை 2022 முதல் அமலுக்கு வந்தது.  

5 /5

அகவிலைப்படி உயர்வின் மூலமாக 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.