கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்

Sevvai Peyarchi Palangal: கிரக மாற்றங்களுக்கு ஜோதிடத்தில் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிரகங்களின் ராசி மாற்றங்கள் பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன.

Sevvai Peyarchi Palangal in Tamil: வீடு, மனை, தைரியம், உற்சாகம், வீரம், குடும்ப வாழ்க்கை ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள செவ்வாய் மார்ச் 15ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளார். செவ்வாயின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும் சிலருக்கு பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். செவ்வாய் பெயர்ச்சி காரணமாக அனைத்து ராசிகளிலும் ஏற்பட உள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /13

செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். எனினும் பிறரிடம் பேசும் பொழுது நிதானமாக பேசுவது நல்லது. மனதை திடமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். அலைச்சல் அதிகமாக இருக்கும்

2 /13

உங்கள் பேச்சாற்றலால் அனைவரையும் உங்கள் பக்கம் ஈர்க்கும். கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான வெற்றி கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

3 /13

உங்கள் மனநிலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். மனம் குழப்பத்துடன் இருக்கும். எனினும், மகிழ்ச்சிகரமான செய்திகளை இந்த காலத்தில் பெறுவீர்கள். பணியிடத்தில் ஏற்றம் இருக்கும். அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும்

4 /13

மனதில் சில குழப்பங்கள் ஏற்படலாம். எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிரிகள் மீது வெற்றி காண்பீர்கள். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும்

5 /13

தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆனால் எதிர்மறையான எண்ணங்களும் மனதில் இருக்கும். நடுநிலையோடு நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அன்னையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்

6 /13

மன வேதனை அதிகரிக்கலாம். தைரியத்தோடு எதிர்கொண்டால் அனைத்து பிரச்சனைகளையும் வெற்றிகரமாக தீர்த்து வைப்பீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் நலம் மேம்படும்

7 /13

மனதில் அமைதி இருக்கும். ஆனால் நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. பண வருமானம் குறையலாம். நண்பர்களின் உதவியால் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது

8 /13

தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். உலக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தாறுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.  

9 /13

மனம் சஞ்சலமாக இருக்கும். மனதை கட்டுப்படுத்துவது நல்லது. அதிகப்படியான கோபம் மற்றும் ஆவேசத்தை தவிர்க்கவும். குடும்பத்தாரின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். வேலையை மாற்ற வாய்ப்புள்ளது

10 /13

மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வர வாய்ப்புள்ளது. தந்தையின் ஆதரவு கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்களுக்கு சில சவால்கள் வரும். நண்பர்களின் ஒத்துழைப்பு இந்த காலத்தில் அதிகமாக இருக்கும்

11 /13

பேச்சில் கவனம் தேவை. கோபம், விரோதம் ஆகியவற்றை களைந்து அனைவரிடமும் சகஜமாக பழகுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்

12 /13

தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். ஆன்மீக செயல்களின் நாட்டு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

13 /13

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.