பேப்பர் கப்பில் தினமும் தேநீர் குடிக்கிறீர்களா? உடலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறீர்கள்!

தேநீர் குடிக்க பேப்பர் கப் யூஸ் பண்றீங்களா..  தினமும் நீங்கள் தவறாமல் டீ குடிக்கிறீர்களா? நீங்கள் உடலுக்கு எவ்வளவு சேதம் செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Health News: ஒரு பேப்பர் கோப்பையில் தவறாமல் தேநீர் குடிக்கிறீர்களா? அப்படியானால், கவனமாக இருங்கள். ஏனெனில் இந்த பழக்கம் உங்கள் உடலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது.

ALSO READ | பல நோய்களுக்கு எமனாகும் Mouth Freshener பற்றித் தெரியுமா?

1 /6

இது மிகவும் ஆப்பத்தானது. பேப்பர் கப்கள் குடிப்பதற்கு பாதுகாப்பானவை அல்ல. அவற்றில் மூன்று கப் டீ குடிப்பவர், சுமார் 75,000 நுண்ணிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார் என்று கரக்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கண்டறிந்துள்ளது.

2 /6

காகிதக் கோப்பைகளில் பொதுவாக மெல்லிய அடுக்கு ஹைட்ரோபோபிக் பொருளால் பூசப்படுகின்றன. அவை பெரும்பாலும் பிளாஸ்டிக் (பாலிஎதிலீன்) மற்றும் சில சமயங்களில் கோ-பாலிமர்களால் ஆனது.

3 /6

கோப்பையில் சூடான தேநீரை அல்லது காப்பியை ஊற்றும் போது, மைக்ரோபிளாஸ்டிக் அடுக்கு கரைந்து, தேநீர் அல்லது காப்பியுடன் கலந்து நமது வயிற்றுக்குள் செல்கிறது.

4 /6

25,000 மைக்ரான் அளவிலான (10 µm முதல் 1000 µm) மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் 100 மில்லி சூடான திரவத்தில் (85 - 90 டிகிரி சி)  கலப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

5 /6

ஆகையால், ஒரு சராசரி நபர் தினமும் 3 வழக்கமான கப் தேநீர் அல்லது காபி குடிக்கிறார் என வைத்துக் கொண்டால், ஒரு காகிதக் கப்பில், மனித கண்ணுக்குத் தெரியாத 75,000 சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

6 /6

இதனை உட்கொள்ளும்போது, ​​உடல்நல பாதிப்புகள் மிக தீவிரமாக இருக்கலாம் என இந்த ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் இவை சுற்று சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.