அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் ஆயுர்வேத மூலிகைகள்

உங்களுக்கும் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறதா? அப்போ இதில் இருந்து ஒரேடியாக விடுப்பட வேண்டுமானால் உடனடியாக இந்த 5 ஆயுர்வேத மூலிகைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கொலஸ்ட்ராலைக் குறைக்க பல மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் இருந்தாலும் ஆயுர்வேத மூலிகைகளை உட்கொள்வதண் மூலமாகவும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தலாம். ஆயுர்வேதத்தில் உள்ள பல இயற்கை வைத்தியங்கள் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலுக்கு சிகிச்சை பெறலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /6

வெந்தயம்: வெந்தயத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் பல ஆரோக்கிய கூறுகள் உள்ளன. இதற்கு இரவு தூங்குவதற்கு முன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை குடிப்பது நன்மை பயக்கும்.  

2 /6

நெல்லிக்காய்: கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் வைட்டமின் சி, ஆண்டி ஆக்சிடெண்டுகள் நெல்லிக்காயில் உள்ளன. ஒரு சிறிய நெல்லிக்காயை வெட்டி விதைகளை எடுக்கவும். மிக்ஸியில் அரைத்து அதிலிருந்து சாறு எடுக்கவும். இந்த நெல்லிக்காய் சாற்றை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து நன்றாக கலக்கவும். இதனை வெறும் வயிற்றில் குடிப்பதால் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கலாம்.  

3 /6

அஸ்வகந்தா: அஸ்வகந்தா மன அழுத்தத்தைக் குறைத்து, உடலின் இரத்த நாளங்களைச் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. இது  கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதற்கு, ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை எடுத்து, ஒரு கிளாஸ் சூடான பாலை கொதிக்க வைத்து, கொதிக்கும் பாலில் அஸ்வகந்தா பொடியை சேர்க்கவும். நன்றாக கலந்து குடிக்கவும்.  

4 /6

பூண்டு: பூண்டில் கொழுப்பைக் குறைக்க உதவும் அற்புதமான ஆயுர்வேத கலவை உள்ளது. அதுமட்டுமின்றி பூண்டில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் அல்லிசின் என்ற கலவை உள்ளது. இதற்கு 3-4 பூண்டு பற்களின் தோல்களை எடுத்து நறுக்கவும். அவற்றை துளிதுளியாக தண்ணீரை சேர்த்து மெல்லுங்கள். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்.

5 /6

திரிபலா: உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டியது அவசியம். இதற்கு திரிபலா பொடியை உட்கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.