சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அக்டோபர் அட்டகாசமாய் இருக்கும்.. நல்ல காலம் ஆரம்பம்!!

Sukran Peyarchi, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம் செல்வம், பெருமை மற்றும் செழுமைக்கு காரணமாக கருதப்படுகிறது. இது தவிர, இது ஒரு சுப கிரகமாக பார்க்கப்படுகின்றது.

அனைத்து கிரகங்களையும் போல சுக்கிரன் கிரகம் மாறும்போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இது மிகப்பெரிய அளவில் நல்ல விளைவுகளை கொண்டு வரும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

 

1 /8

சுக்கிரன் கிரகம்: சுக்கிரன் கிரகம் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. மனிதர்களின் உலக இன்பம், செல்வம், செழிப்பு, புகழ், அன்பு மற்றும் வாழ்க்கையில் ஈர்ப்பு ஆகியவை சுக்கிரன் கிரகத்தின் அருளால் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றன. 

2 /8

சுக்கிரன் பெயர்ச்சி: அக்டோபர் மாத தொடக்கத்தில், அதாவது அக்டோபர் 2, 2023 அன்று சுக்கிரன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆவார். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் அக்டோபர் மாதம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சிறப்பானதாக இருக்கும்.   

3 /8

ராசிகளில் தாக்கம்: அனைத்து கிரகங்களையும் போல, சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பர்றி இந்த பதிவில் காணலாம். 

4 /8

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சிம்ம ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் ரிஷப ராசியினருக்கு அதிர்ஷ்டமாகவும் நன்மையாகவும் இருக்கும்.

5 /8

சிம்மம்: சுக்கிரனின் ராசி மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில், மகிழ்ச்சிக்கான நிகழ்வுகள் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம். வியாபாரத்தில் மகத்தான வெற்றியை அடைய முடியும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் நல்ல செய்தி வந்து சேரும்.

6 /8

துலாம்: துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இப்படிப்பட்ட நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி சுக்கிரனின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க அதிக வாய்ப்புகள் இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. தாய்வழியில் நிதிப் பலன்களை எதிர்பார்க்கலாம். திருமண வாழ்க்கையிலோ அல்லது காதல் வாழ்க்கையிலோ மகிழ்ச்சி நிலைத்திருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம். 

7 /8

சுக்கிரன் அருள் பெற: சுக்கிரன் அருள் பெற, ‘ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்ரப்ரசோதயாத்' என்ற இந்த மந்திரத்தை தினமும் கூறி வரலாம். 

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை