இஸ்லாமிய நாட்டில் உருவான பிரம்மாண்டமான கோவில்! ஆலய குடமுழுக்கு விழா நாளை நேரலையில்!

PM Modi In UAE: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (2024 பிப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கான இரண்டு நாட்கள் பயணத்தைத் தொடங்கினார். கடந்த பத்தாண்டு ஆட்சியில், ஏழாவது முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பிரதமர் சென்றுள்ளார் என்பதும், அதிலும் 8 மாதங்களில் மூன்றாவது முறையாக சென்றுள்ளார் என்பதும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் நெருக்கமாகி வருவதைக் குறிக்கிறது.  

BAPS Swaminarayan Mandir: அபுதாபி வந்தடைந்த பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து உரையாடினார்... 

1 /7

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

2 /7

நாளை வளைகுடா நாட்டின் முதல் இந்து ஆலயத்தை பிரதமர் திறந்துவைக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஷேக் முகமது பின் ரஷித் ஐ மக்தூமையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்புகளின்போது கோவில் கட்ட அளித்த ஆதரவிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

3 /7

அரசின் ஆதரவு இல்லாமல் BAPS கோவிலை கட்டுவது சாத்தியமில்ல" என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரிடம் இருதரப்பு சந்திப்பின் போது மோடி கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

4 /7

இரு தலைவர்களுக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பில் பல ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. UPI மற்றும் RuPay கார்டுகள் UAE இல் அறிமுகப்படுத்தப்பட்டன.

5 /7

2024-ம் ஆண்டுக்கான உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார், அங்கு சிறப்புரை ஆற்றுகிறார்.

6 /7

கடந்த ஒன்பது ஆண்டுகளில், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் கல்வி என பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு வளர்ந்துள்ளது. கலாச்சாரம் மற்றும் மக்கள் இடையேயான இணைப்பு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது

7 /7

இந்தியாவும் கத்தாரும் வரலாற்று ரீதியாக நெருக்கமான மற்றும் நட்புறவைக் கொண்டுள்தை பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியின் ஏழாவது பயணம் நிரூபிக்கிறது