இந்திய அணிக்கு ஸ்லோ ஓவர் ரேட் அபராதம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் செக்..!

இந்திய அணிக்கு ஸ்லோ ஓவர் ரேட் அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அணி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

1 /7

செஞ்சூரியனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஸ்லோ ஓவர் ரேட் வீசியதற்காக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.   

2 /7

இந்த அபராதத்தால், இந்திய அணிக்கு இரண்டு WTC புள்ளிகள் மைனஸ் செய்யப்பட்டு, 10 சதவீதம் போட்டிக் கட்டணமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.  

3 /7

இந்த அபராதத்தால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பெனால்டிக்கு முன் 16 புள்ளிகள் மற்றும் 44.44 என்ற பிசிடியுடன் 5வது இடத்தில் இருந்த இந்திய அணி, பெனால்டிக்கு பிறகு 38.89 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.  

4 /7

இதன்மூலம் 6வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு, ரோகித் சர்மா பொறுப்பேற்றுள்ளார்.   

5 /7

போட்டியின் போது, இந்திய அணி ஸ்லோ ஓவர் ரேட் வீசியதை ரோகித் சர்மா ஒப்புக்கொண்டார். இதனால், முறையான விசாரணை தேவையில்லை என ஐசிசி முடிவு செய்தது.  

6 /7

இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது, அணிக்கு பெரும் பின்னடைவாகும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன்செய்ய வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.   

7 /7

அதே நேரத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முன்னேற, தொடர்ந்து வெற்றிகளைப் பெற வேண்டியது அவசியம்.