IPL 2022 ஏலத்துக்கான கவுண்டன் தொடங்கியது

ஐபிஎல் 2022 தொடருக்கான ஏலம் நடைபெறுவதற்கான கவுண்டன் தொடங்கியுள்ளது.

2022 ஐபி.எல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களுருவில் நடைபெறுகிறது. 2 நாட்கள் நடைபெறும் ஏலத்தில் எந்த வீரருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

1 /7

மொத்தம் 590 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். இந்திய வீரர்கள் 370 பேர். வெளிநாட்டு வீரர்கள் 220 பேர். இந்த ஆண்டு புதியதாக 2 அணிகள் சேர்ந்துள்ளன. அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன், லக்னோ அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2 /7

2 கோடி ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள வீரர்களுக்கான பட்டியலில், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், அஸ்வின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, அஜிங்கியா ரஹானே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

3 /7

இவர்களை தவிர, இளம் வீரர்களான இஷான் கிஷன், தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதில் இஷான் கிஷனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கிறது என முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.

4 /7

சுரேஷ் ரெய்னா மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், அவர்களுக்கு அந்தளவுக்கு வாய்ப்பு இருக்குமா? என்பது கேள்விக்குறி.   

5 /7

இந்திய U19 கேப்டன் யாஷ் துல், விக்கி ஓஸ்வால், ராஜவர்த்தன் ஆகியோருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஷாருக்கான், ஆவேஷ்கான் மற்றும் தீபக் ஹூடாவை எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கலாம்.

6 /7

ஏலப்பட்டியலில் இருப்பவர்களில் 42 வயதான தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் அதிக வயது கொண்ட வீரர். ஆப்கானிஷ்தானின் 17 வயதான நூருல் அகமது, ஏலத்தில் பங்கேற்கும் மிகவும் இளம் வயது வீரர்

7 /7

10 அணிகளில் அதிக காஷ்பேக் வைத்திருக்கும் அணி பஞ்சாப். அந்த அணி கைவசம் 72 கோடி ரூபாய் உள்ளது. ஸ்டார் பிளேயர்களை தூக்க ரெடியாக உள்ளது.