Train Accident: கடந்த 13 நாட்களில் 8 ரயில் விபத்துகள்.. தொடரும் உயிர் பலிகள்!

List Of July 2024 Train Accidents: இந்த மாதத்தில் (July 2024) தொடர்ந்து ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், பயணிகள் இடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. 

List Of 8 Train Derailments In Past 13 Days: கடந்த 13 நாட்களில் மட்டும் பயணிகள் ரயில், சரக்கு ரயில் என அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டு நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த மாதத்தில் நடந்த ரயில் விபத்துகள் குறித்து பார்ப்போம்.

1 /9

இந்த மாதத்தில் நடந்த ரயில் விபத்துகள் குறித்து பார்ப்போம். (Image Credit: ANI / IANS / PTI / Social Media)

2 /9

ஜூலை 30: (செவ்வாய்க்கிழமை) ஜார்க்கண்டில் அதிகாலையில் ஹவுரா-மும்பை மெயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர். மும்பை நோக்கிச் சென்ற ரயில், சக்ரதர்பூர் அருகே, ராஜ்கர்ஸ்வான் வெஸ்ட் அவுட்டர் மற்றும் பாரபாம்பூ இடையே, சக்ரதர்பூர் பிரிவில் அதிகாலை 3:45 மணியளவில் தடம் புரண்டது.

3 /9

பீகார் தர்பங்காவிலிருந்து புதுடெல்லி செல்லும் பீகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் இன்ஜினில் இருந்து  இரண்டு துண்டாக பிரிந்தது. ஆனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

4 /9

ஜூலை 26 (வெள்ளிக்கிழமை) அன்று புவனேஸ்வரில் உள்ள மஞ்சேஸ்வர் ஸ்டேஷன் யார்டில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

5 /9

21 ஜூலை (சனிக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள திஜாரா கேட் அருகே சரக்கு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. உயிர் சேதம் இல்லை.

6 /9

21 ஜூலை (ஞாயிற்றுக்கிழமை ) அன்று மாலை 6 மணியளவில் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. உயிர் சேதம் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

7 /9

ஜூலை 20 (சனிக்கிழமை ) அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹா ரயில் நிலையத்திற்கு அருகில் மாலை சரக்கு ரயில் தடம் புரண்டது. உயிர் சேதம் இல்லை.

8 /9

ஜூலை 19 (வெள்ளிக்கிழமை) குஜராத்தில் வல்சாத் மற்றும் சூரத் ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் வேகன் தடம் புரண்டு ரயில் விபத்து 

9 /9

ஜூலை 18 (வியாழக்கிழமை) அன்று உத்தரபிரதேசத்தில் கோண்டா அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது நான்கு பேர் பலியாகினர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.