Migraine தலைவலி பாடாய் படுத்துதா? காரணங்கள், அறிகுறிகள் இவைதான்

Migraine Headaches: இந்நாட்களில் தலைவலி பிரச்சனை என்பது மிகவும் பொதுவானதாகிவிட்டது. பலர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை காரணமாக தலைவலி வரும். சிலருக்கு வாழ்க்கைமுறைக் கோளாறுகளால் தலைவலி பிரச்னை ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் கடுமையான வலியால் அவதிப்படுவார்கள். ஒற்றைத் தலைவலி நோயாளிகளுக்கு தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி போன்றவை பொதுவான பிரச்சனைகளாகும். இது ஒரு நரம்பியல் பிரச்சனையாகும். கடுமையான தலைவலி, வாந்தி மற்றும் குமட்டல், தோலில் குத்தும் உணர்வு, எரிச்சலான மனநிலை, பேசுவதில் சிக்கல், கை கால்களில் கூச்சம், கண்களின் கீழ் கருவட்டங்கள், உடலில் பலவீனம், பார்வையில் இருண்ட புள்ளிகள் தெரிவது ஆகியவை ஒற்றைத் தலைவலிக்கான பொதுவான அறிகுறிகளாகும்.

 

1 /5

மைக்ரேன் தலைவலி நோயாளிகள் எதனால் இந்த பிரச்சனை அதிகரிக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒவ்வொருக்கும் இந்த தலைவலிக்கான ட்ரிகர் பாயிண்ட், அதாவது தூண்டுதல் காரணிகள் வெவ்வேறாக இருக்கும். ஆகையால், இந்த பிரச்சனை உள்ளவர்கள், தங்களுக்கு மைக்ரேன் தலைவலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை முதலில் கண்டறியவேண்டும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

2 /5

சிலருக்கு தூக்கம் வருவதில் பிரச்சனை இருக்கும். இப்படிப்பட்டவர்கள் நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதால் தலைவலி பிரச்சனை அதிகரிக்கத் தொடங்குகிறது. தூக்கமின்மை சோர்வு மற்றும் பலவீனத்திற்கு வழிவகுக்கிறது. உணவு சரியாக ஜீரணமாகாமல் உடலில் பலவிதமான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஒற்றைத் தலைவலி பிரச்சனையும் அதிகரிக்கிறது.  

3 /5

இப்போதெல்லாம் அனைத்து நோய்களுக்கும் மூல காரணம், அதிகரிக்கும் கவலை மற்றும் மன அழுத்தமாக உள்ளது. இதன் காரணமாக ஒற்றைத் தலைவலி பிரச்சனையும் அதிகரிக்கிறது. சிலருக்கு வீட்டில் உள்ள சண்டை சச்சரவுகளாலோ அல்லது அலுவலக வேலையின் டென்ஷனாலோ தலைவலி வரும். ஒற்றைத் தலைவலிக்கு இவையும் காரணமாக இருக்கலாம்.

4 /5

சிலருக்கு உடலில் ஏற்படும் அமிலத்தன்மை பிரச்சனையால் ஒற்றைத் தலைவலி பிரச்சனையும் வரும். அத்தகையவர்கள் தலைவலி வரும்போது கண்டிப்பாக வாந்தி எடுப்பார்கள். அதன் காரணமாக அமிலம் வெளியாகி வலி குறைகிறது. அதே சமயம் சிலருக்கு வயிற்றில் உருவாகும் வாயுப்பிரச்சனையால் தலைவலி வர ஆரம்பிக்கும். தலையில் வாயு அதிகரித்து வலி அதிகரிக்கிறது. அப்படிப்பட்டவர்கள் வாயுவை ஏற்படுத்தும் பதார்த்தங்களை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மேலும் வெறும் வயிற்றில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

5 /5

கோடையில் ஒற்றைத் தலைவலி பிரச்சனை மிகவும் அதிகரிக்கிறது. கடுமையான சூரிய ஒளியில் வெளியே சென்றாலும் மைக்ரேன் தலைவலி பிரச்சனை தொடங்குகிறது. திடீரென்று கடும் வெயிலிலிருந்து ஏசி அறைக்குள்ளோ, அல்லது, ஏசி அறையிலிருந்து சூடான இடத்துக்கோ செல்வதாலும் ஒற்றைத் தலைவலி தொடங்குகிறது. இது தவிர அதிக வெப்பத்தாலும் தலைவலி பிரச்சனை அதிகரிக்கிறது. (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)