ஐபிஎல் அதிசயம்: 15 வருஷமா ஒரே அணிக்காக விளையாடும் வீரர்..!

ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து 15 ஆண்டுகளாக விளையாடுகிறார் எம்எஸ் தோனி.

 

1 /8

சென்னை சூப்பர் கிங்ஸூம், தோனியையும் பிரித்து பார்க்க முடியாது. ஐபிஎல் தொடரில் இவரது தலைமையில் இன்றளவும் கோலோச்சிக் கொண்டிருக்கிறது சிஎஸ்கே  

2 /8

ரோகித் சர்மாவுக்கு பிறகு 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரே கேப்டன் எம்எஸ் தோனி. இந்த சாதனை மட்டுமல்ல, பல மகத்தான சாதனைகளை ஐபிஎல் தொடரில் கொண்டிருக்கிறார் எம்எஸ்டி.  

3 /8

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு மினி ஏலம் நடைபெறும். அதற்காக அணிகள் தங்களது அணியில் இருந்து சில பிளேயர்களை விடுவிக்கும். அந்த வகையில் தோனியை ஒருமுறைகூட விட்டுக்கொடுக்கவில்லை.   

4 /8

அவரும் அதற்கேற்ப பல சகாப்தங்களை படைத்துக் கொண்டே இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனை தாத்தாக்கள் அணி என அனைவரும் கிண்டலடித்தனர்.  

5 /8

ஆனால், தோனி அதே அணியை வைத்துக் கொண்டு தான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அத்தினார்.   

6 /8

இது குறித்து தோனியிடம் கேட்டபோது, வயது குறித்து நான் சிந்திப்பதில்லை, யாரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை மட்டுமே கவனம் செலுத்துவேன், வெளி விமர்சனங்களுக்கு ஒருபோதும் காதுகொடுப்பதில்லை என பதிலளித்தார்.  

7 /8

தேவையானவைகளுக்கு கவனம் செலுத்தினால் எல்லாமே ஈஸியாக இருக்கும் என்பது தான் தோனியின் பார்முலா. கடினமான விஷயத்தைக் கூட எளிமையாக செய்யலாம் என்று தோனி தெரிவித்துள்ளார்.  

8 /8

அவரை இம்முறையும் ரீட்டெய்ன் செய்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இது தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக கூட இருக்கலாம் என்பதால் அவரை சாம்பியனாக வழியனுப்ப வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். நடக்குமா?