Health Tips: உடலுக்கு ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் 'சில' பழங்கள்!

ஆக்ஸிஜன் நிறைந்த பழங்கள்: மாறிவரும் இன்றைய வாழ்க்கை முறையில், பல வித நோய்களை நாம் ஒன்றாக எதிர்த்து போராடும் நிலை உள்ளது. மேலும் அதிகரித்து வரும் காற்றின் மாசுபாடு, சுவாச பிரச்சனைகளை அதிகரித்துள்ளது. எனவே சுவாசப் பிரச்சனை வராமல் இருக்க உடலின் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க வேண்டும்.

1 /4

சுவாச பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக நீங்கள் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியதில்லை. மாறாக, உங்கள் உணவில் சில பழங்களை சேர்த்துக் கொண்டால் போதும். உடலில் ஆக்சிஜன் அளவை சரி செய்ய எந்தெந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை  தெரிந்து கொள்வோம்.  

2 /4

பேரிக்காய்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது, பேரிக்காய்களில் வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், புரதம், நார்ச்சத்து மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலின் ஆக்ஸிஜன் அளவு சீராக இருக்கும்.  

3 /4

பப்பாளியில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல்,  உடலின் ஆற்றல் அளவை அதிகரித்து,  நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. எனவே, உங்கள் உடலில் ஆக்சிஜன் குறைந்தால், பப்பாளியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பப்பாளி வயிறு பிரச்சனைகளை தீர்ப்பதோடு, ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. காலையில் இதை உட்கொள்வதன் மூலம் மல சிக்கலில் இருந்து முழுமையாக விடுபடலாம். 

4 /4

கிவி கிவி புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டது. அதன் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆரோக்கிய நன்மை பயக்கும்.  உடலில் இரத்த ஆக்ஸிஜனை அதிகரிக்க உதவும்  பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. இதனுடன் இதை உட்கொள்வதால் உங்கள் முகத்தில் பொலிவும் ஏற்படும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)