இந்தியாவில் முதன்முறையாக நீருக்கடியில் மெட்ரோ! சாதனை நிகழ்த்தும் கொல்கத்தா

 India’s First Underwater Metro: இப்போது இந்தியாவில் மெட்ரோ ஆற்றின் கீழ் செல்லும். இந்தியாவில் இதுவே முதல் முறை! இது கொல்கத்தாவின் புதிய சாதனை...

 

2023 ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரு புதிய வரலாறு தொடங்கும். இன்றுதான் மெட்ரோ ரயிலின் சக்கரங்கள் முதன்முறையாக கங்கை மற்றும் ஹூக்ளி நதிக்கு அடியில் ஓடத் தொடங்கவிருக்கிறது. 

1 /6

18ம் நூற்றாண்டு முதல் கொல்கத்தாவின் போக்குவரத்து பல பரிணாமங்களை கண்டுள்ளது. கடந்த 150 ஆண்டுகளில் பாண்டூன் பாலம், கான்டிலீவர் பாலம், தொங்கு பாலம் முதல் என முன்னேறிய போக்குவரத்து, தற்போது கங்கைக்கு அடியில் மெட்ரோ செல்வது வரை வந்துவிட்டது

2 /6

ஏப்ரல் 9 ஆம் தேதியன்று, மெட்ரோ ரெயிலின் சக்கரங்கள் முதன்முறையாக கங்கை மற்றும் ஹூக்ளி நதிக்கு அடியில் ஓடத் தொடங்கும். கொல்கத்தா-ஹவுரா, பாலம் மூலம் மட்டுமின்றி சுரங்கப்பாதை மூலமாகவும் இணைக்கப்படும். இந்தியா முழுவதும் ஆற்றின் அடியில் மெட்ரோ ரயில் பயணம் செய்யும் முதல் முறையாக சாத்தியமாகிறது

3 /6

ஏப்ரல் 9 ஆம் தேதி, கிழக்கு-மேற்கு பாதையில் முதல் முறையாக கங்கை வழியாக மெட்ரோ செல்கிறது 

4 /6

கொல்கத்தாவில் உள்ள கங்கை ஆற்றுப்படுகை நீர்மட்டத்திலிருந்து 13 மீட்டர் கீழே உள்ளது. மெட்ரோ சுரங்கப்பாதை 13 மீட்டர் கீழே கட்டப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையின் மேல் மற்றும் கீழ் இடையே உள்ள இடைவெளி 6 மீட்டர். அதாவது, கங்கை நதிப் படுகையில் இருந்து 19 மீட்டர் கீழே மெட்ரோ பாதை உள்ளது.

5 /6

ஏப்ரல் 9ம் தேதி மெட்ரோ வரலாற்றில் மறக்க முடியாத நாளாக இருக்கும். அன்றுதான் முதல் முறையாக கங்கைக்கு அடியில் ஒரு ரேக் செல்லும். இறுதி அனுமதி கிடைத்ததும், பயணிகள் சேவை தீவிரமாக துவங்கும்.

6 /6

ஞாயிற்றுக்கிழமை 9-ம் தேதியன்று, நீருக்கடியில் ரேக்குகள் நகர்த்தப்படும். முதல் நீருக்கடியில் சோதனை ஓட்டம் மிக விரைவில் நடைபெறும்.