உலக கோப்பை டிக்கெட் மட்டும் என்கிட்ட கேட்காதீங்க ப்ளீஸ் கேட்காதீங்க - விராட் கோலி கலகல

உலக கோப்பை கிரிக்கெட் மேட்சுக்கு யாரும் டிக்கெட் கேட்க வேண்டாம் என விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

1 /7

உலகக்கோப்பைத் தொடர் நாளை முதல் தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெறுவதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் போட்டிகளை நேரில் காண டிக்கெட் வேண்டிக் காத்திருக்கின்றனர்.  

2 /7

உலகக்கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. ஏறக்குறைய மூன்று கட்டங்களாக டிக்கெட் விற்பனை நடந்திருந்தது. சென்னையில் அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி நடைபெறவிருக்கிறது.   

3 /7

அதுதான் இந்த ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டி. அதற்கான இறுதிக்கட்ட டிக்கெட் விற்பனைகூட நேற்று ஆன்லைனில் நடந்திருந்தது. பலமணி நேரமாக ஆன்லைன் வரிசையில் காத்திருந்த ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடனே வெளியேறியிருந்தனர்.   

4 /7

டிக்கெட்டுக்கான டிமாண்ட் அந்தளவுக்கு கடுமையாக எகிறியிருக்கிறது. இந்தச் சூழலில்தான் டிக்கெட்டுகள் குறித்து விராட் கோலி நகைச்சுவையாக இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.  

5 /7

'உலகக்கோப்பை நெருங்கிவிட்டது. என்னுடைய நண்பர்களிடம் பணிவாக ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன், இந்தத் தொடர் முழுவதும் யாரும் என்னிடம் டிக்கெட் கேட்டு அணுக வேண்டாம். வீட்டிலிருந்தே மகிழ்ச்சியாக போட்டிகளைக் கண்டு களியுங்கள்!' என கோலி கூறியிருக்கிறார்.  

6 /7

கோலியின் இந்த ஸ்டோரியை குறிப்பிட்டு அவரின் மனைவியான அனுஷ்கா ஷர்மாவும் ஜாலியாக ஒரு ஸ்டோரியை பதிவிட்டிருக்கிறார்.   

7 /7

அவர் கூறியிருப்பதாவது, 'கோலி உங்களின் மெசேஜ்களுக்கு ரீப்ளை செய்யவில்லையெனில் என்னிடம் உதவி கேட்டு வர வேண்டாம். உங்களின் புரிதலுக்கு நன்றி!' என ஸ்மைலிக்களை பறக்கவிட்டிருக்கிறார்.