சனி உருவாக்கும் ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வம் பெருகும்

ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார் சனி பகவான். அந்தவகையில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கடந்த ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியானார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு வந்துள்ள சனி சச மகாபுருஷ் ராஜயோகத்தை உருவாக்கிவுள்ளார். இதனால் சிலருக்கு தொழிலில் நல்ல வெற்றியுடன், நல்ல லாபத்தையும் பெற வைக்கும்.

1 /4

சச ராஜயோகம்: இந்த சச ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனால் சில ராசிக்காரர்கள் மட்டும் இந்த ராஜாயோகத்தால் அபரிமிதமான லாபத்தைப் பெறுவார்கள். எனவே இந்த ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள் என்பதைக் காண்போம்.

2 /4

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலனைப் பெறுவார்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல பண பலன்கள் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் லாட்டரிகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.  

3 /4

தனுசு ராசி: உங்களின் தைரியம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. கலைத் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் அற்புதமானதாக இருக்கும்.  

4 /4

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமானதாக இருக்கும். மரியாதை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகள் தங்களில் தொழிலில் முன்னேற்றத்தை பெறுவார்கள்.