நோய் தீர்க்கும் பிரிஞ்சி இலை! ஆனால், சிலருக்கு நோயை ஏற்படுத்தும்... ஹெல்த் அலர்ட்...

Bay Leaves Alert: மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலை, நல்ல சுவையைக் கொடுக்கக்கூடியது. பிரியாணி இலை. என்றும் அழைக்கப்படும் இந்த சிறப்பான இலை, ஆயுர்வேதத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இந்த இலையின் தீமைகளும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. 

நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலையை, சில நோய் பாதிப்புள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது. அதற்கான காரணங்களை தெரிந்துக் கொள்வோம்.

1 /8

பிரியாணி இலையில் இரும்பு, தாமிரம், கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், வைட்டமின் சி, ஏ, பி6, ரிபோஃப்ளேவின், துத்தநாகம், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 

2 /8

பிரியாணி இலை, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 6 மாதங்களுக்கும் மேலாக உணவில் பிரிஞ்சி இலைகளை சேர்த்த பிறகு அவர்களுக்கு குளுக்கோஸ் அளவு குறைந்துள்ளது என்பதை ஒரு ஆய்வு நிரூபித்துள்ளது. இதற்கு காரணம், இயற்கையாகவே பாலிஃபீனால் எனப்படும் சேர்மங்கள் கொண்டுள்ளதே காரணம். இது குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் என்பதால், நீரிழவு நோய்க்காக மருந்து எடுத்து கொள்பவர்கள் பிரியாணி இலைகளை சேர்ப்பது சர்க்கரையின் அளவை வெகுவாக குறைத்து விடும்.

3 /8

நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலையில் உள்ள இரசாயனங்கள் கொலஸ்ட்ரால் அளவை நன்றாக குறைக்கிறது. கொழுப்பு அதிகம் உள்ளவர்களிடம் 20 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொழுப்பு 20 சதவீதம் வரை குறைந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. குறைந்த அடர்த்தி கொழுப்பு 32 சதவீதமும், அதிக அடர்த்தி கொண்ட கொழுப்பு 29 சதவீதமும்,டிரைகிளிசரைடுகள் 34 சதவீத அளவிற்கும் குறைந்தது

4 /8

ஆஸ்துமா உட்பட பல பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியமாக பிரிஞ்சி இலை பயன்படுத்தப்பட்டாலும், இது தொடர்பான அறிவியல் சான்றுகள் இல்லை என்பதால் இதை உறுதிபடுத்த முடியாது

5 /8

பிரியாணி இலையை வெறுமனே சாப்பிட்டால், அது முழுமையாக ஜீரணம் ஆகாது. 

6 /8

7 /8

கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பிரியாணி இலையின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.  

8 /8

பிரிஞ்சி இலையை தேநீராக தொடர்ந்து அருந்தி வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து விடும். அதேபோல், நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்டலாம்