நிர்மலா தேவியிடம் விசாரிக்க சிறைக்கு செல்லும் சந்தானம்!

பேராசிரியை நிர்மலா தேவியிடம், ஆளுநர் பன்வாரிலால் அமைத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் சிறையில் சென்று இன்று விசாரணை நடத்துகிறார்!

Last Updated : Apr 26, 2018, 08:14 AM IST
நிர்மலா தேவியிடம் விசாரிக்க சிறைக்கு செல்லும் சந்தானம்!  title=

தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதன்மூலம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் முதல் சென்னை ஆளுநர் மாளிகை வரை சர்ச்சைக்குள்ளாதில் பீதியில் உள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது. 

இதையடுத்து, சி.பி.சி.ஐ.டியின் முதற்கட்ட விசாரணை முடிவில் நேற்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணைக்காக நிர்மலா தேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி கோராததால் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

மே 9ஆம் தேதி வரை நிர்மலா தேவியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவியிடம், ஆளுநர் பன்வாரிலால் அமைத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் மதுரை மத்திய சிறைக்கு சென்று இன்று விசாரணை நடத்துகிறார். 

இதற்கிடையே, நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்புடைய பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த சந்தானம் திட்டமிட்டுள்ளார். 

Trending News