Viral Video: காப்பாற்றிய பெண்ணிற்கு 'நன்றி' கூறிய குட்டி யானை!

குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் என்ன செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 28, 2022, 06:15 PM IST
  • குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை.
  • பலவிதமான உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை.
  • குட்டி யானைககள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன.
Viral Video: காப்பாற்றிய பெண்ணிற்கு 'நன்றி'  கூறிய குட்டி யானை! title=

குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். பலவிதமான உணர்ச்சிகளை  புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை.  அரிதாகவே மனிதர்களைத் தாக்குகின்றன. அதனை சீண்டினால் தான் தாக்கும். அன்பை நன்றாக புரிந்து கொள்ளக் கூடியவை.  

குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. குட்டி யானைககள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன. யானையின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் சில சமயங்களில் விநோதமாகவும் இருப்பதால் அவை நம் மனதை லேசாக்குகின்றன. அந்த வகையில், சேற்றில் மாட்டிக் கொண்ட குட்டி யானை ஒன்று, தனக்கு உதவிய பெண்ணிடன் தனது நன்றியை தெரிவிப்பதைக் காட்டும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!

வைரலாகும் குட்டி யானை வீடியோவை கீழே காணலாம்:

அந்த வீடியோவில், குட்டி யானை ஒன்று, சாலை ஓரத்தில் வயல் போன்ற நிலப்பரப்பில் நின்றுகொண்டிருப்பதைக் காணலாம். உண்மையில், அந்த குட்டிய் யானை மணலில் சிக்கிக் கொண்டு விட்டது போலும்.  அந்த வ்ழியாக வந்த பெண் ஒருவர் யானைக்கு உதவிட எண்ணி, அதன் காலை பிடித்து இழுக்கிறார்.  சிறிது நேர முயற்சிக்கு பிறகு, எப்படியோ, குட்டி யானை மணலில் இருந்து தனது காலை விடுவித்துக் கொண்டு,  நிற்கிறது. அதே நேரத்தில் நன்றி உணர்ச்சியுடன் தனது துதிக்கையை தூக்கி, அந்த பெண்ணை ஆசீர்வதிப்பது போல் செய்கிறது.  

இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், " சேற்றில் இருந்து யானைக்குட்டி வெளியே வர உதவி பெண்ணிற்கு ஒரு ஆசீர்வாதத்துடன் நன்றி தெரிவிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க |Viral Video: நாய்க்குட்டியை கட்டி அணைக்கும் பூனை; இணையத்தை கலக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News