Desi Ghost Rider: ஊஞ்சலாடும் சோளக்கொல்லை பொம்மை, பீதியில் நெட்டிசன்கள்

இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து விவசாய நிலங்களிலும் வைக்கோல் பொம்மையை வைத்திருப்பதைக் காணலாம். ஆனால், இந்த பொம்மை ஊஞ்சலாடுவது பார்ப்பவர்களுக்கு திகில் ஏற்படுத்துகிறது... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 13, 2021, 07:17 PM IST
Desi Ghost Rider: ஊஞ்சலாடும் சோளக்கொல்லை பொம்மை, பீதியில் நெட்டிசன்கள் title=

சமூக ஊடகங்களில் தினசை நூற்றுக்கணக்கான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதில் சில வைரல் ஆகின்றன. ஆனால், தற்போது டிவிட்டரில் பகிரபப்ட்ட வீடியோ, அச்சமூட்டுவதாக இருக்கிறது. அதனால் வைரலாகிறது.

விவசாய நிலங்களில் பறவைகளும், விலங்குகளும் வந்து பயிர்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக மனிதர்கள் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக கொல்லை பொம்மை வைப்பார்கள். அதை வைக்கோலில் செய்து, மனிதர்கள் பயன்படுத்தும் ஆடையை அணிவித்திருப்பார்கள். 

இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து விவசாய நிலங்களிலும் வைக்கோல் பொம்மையை வைத்திருப்பதைக் காணலாம். ஆனால், இந்த பொம்மை ஊஞ்சலாடுவது பார்ப்பவர்களுக்கு திகில் ஏற்படுத்துகிறது. 

பறவைகள் மற்றும் விலங்குகளை பயிர்களை சேதப்படுத்தாமல் பயப்படுத்துவதற்காக, ஒரு ஸ்பிரிங்குடன் அதனை இணைத்துள்ளார்கள். பொம்மையாக நிற்பதைவிட, வேகமாக அசைவது பயம் கொடுக்கும் என்பதால் இப்படி செய்துள்ளார்கள். ஆனால் இது பார்க்கும் மனிதர்களுக்கே பீதியை கிளப்புகிறது.

அதிலும் இரவு நேரத்தில் யாரும் இல்லாத தனிமையில் பார்த்தால் எப்படி இருக்கும்? அதுவும் சூறைக்காற்று வீசும்போது தனிமையில், வெளிச்சம் இல்லாமல் இப்படி ஊஞ்சலாடுவதைப் பார்த்தால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் என ஒரு நெட்டிசன் பதிவிட்டிருக்கிரார்.
 
ஒரு ட்விட்டர் பயனர் பகிர்ந்த இந்த ஹாரர் வீடியோவில், பொம்மைக்கு பச்சை ஸ்வெட்டர், நீல பாவாடை மற்றும் சிவப்பு ஸ்வெட்டர் மற்றும் கிளவுஸ் அணிவிக்கப்பட்டுள்ளது.  விசித்திரமான தோற்றமுடைய இந்த பொம்மை ஒரு ஸ்ப்ரிங்குடன் இணைக்கப்பட்டு, சுற்றி சுற்றி ஊசலாடுகிறது. இந்தக் காட்சியை பார்ப்பதற்கே திகிலாக இருக்கிறது.

Also Read | ஆண் நண்பருடன் ஜாலியாக இருக்கும் வீடியோவை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்
 
இந்த கொல்லை பொம்மைக்கு நாட்டு பேய் என்றும் சிலர் பெயர் வைத்துவிட்டார்கள். இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்த, இல்லை பார்த்து பயந்த இந்த வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர்.

"இரவில் இதைப் பார்ப்பது கற்பனை செய்து பாருங்கள், இது பலவீனமான இதயமுள்ளவர்கள், இந்த பேயுடனே சென்று சேர்ந்துவிட வேண்டியது தான்” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும்… இந்த வீடியோவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பயப்படுகிறீர்களா இல்லை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறதா?   

Also Read | #வரிகட்டுங்க_விஜய்: நடிகர் விஜய்யை வரி கட்ட சொல்லி ட்விட்டரில் ட்ரெண்டிங்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News