சமூக வலைதளத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ பக்கத்தை அறிவித்த கமல்

சமூக வலைதளத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ பக்கத்தை அறிவித்தார் கமல்ஹாசன்.

Last Updated : Feb 21, 2018, 08:15 PM IST
சமூக வலைதளத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ பக்கத்தை அறிவித்த கமல் title=

மதுரையில் நடைபெற்ற பொதுகூட்ட மைதானத்திறல் தனது கட்சி கொடியை ஏற்றினார் கமல்ஹாசன். பின்னர் கட்சியின் பெயரையும் அறிவித்தார். கட்சியின் பெயர் "மக்கள் நீதி மையம்". கமல் கட்சி கொடியில் சிகப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் உள்ளது. இணைந்த கரங்களோடு நடுவில் நட்சத்திரம் உள்ளது. 

முகநூலில் "மக்கள் நீதி மய்யம்" அதிகாரப்பூர்வ பக்கத்தை அறிவித்தார். அதேபோல ட்விட்டரிலும் அதிகாரப்பூர்வ பக்கத்தை அறிவித்தார். அதைக்குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:- நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’
தமிழகம் விழித்தெழட்டும். #மய்யம் #மக்கள்_நீதி_மய்யம் எனக் கூறியுள்ளார்.

 

 

Trending News