ராஜிவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி!

டெல்லியில் இன்று ராஜீவ் காந்தியின் 27வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்!

Last Updated : May 21, 2018, 10:13 AM IST
ராஜிவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி! title=

முன்னாள் பிரதமர் ராஜிவ், கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், அவர் நினைவாக ஆண்டுதோறும் ராஜீவ் காந்திநினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அவரது 27வது ஆண்டு நினைவு தினம் டெல்லியில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி புதுடெல்லியில் உள்ள வீர் பூமியில் சோனியா காந்தி இன்று மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் ஆகியோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். 

அவர்களை தொடர்ந்து, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் மகாராஷ்டிர முதல் மந்திரி மற்றும் காங்கிரஸ் தலைவரான சுஷில் குமார் ஷிண்டே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Trending News