குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதங்கள் வரப்பிரசாதமாக இருக்கும்

Guru Vakra Peyarchi: குருவின் வக்ர நிலையால் எந்தெந்த ராசிகளுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 27, 2022, 05:21 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூலை 29 முதல் குரு பகவானின் வக்ர நிலை சுப பலன்களை தரும்.
  • வருமானம் கூடும்.
  • செல்வம் பெருகும், வசதிகள் அதிகரிக்கும்.
குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதங்கள் வரப்பிரசாதமாக இருக்கும் title=

குரு வக்ர பெயர்ச்சி: தேவகுரு வியாழன் 13 மாதங்களில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். ஜூலை 29 முதல் வியாழன் தன் சொந்த ராசியான மீனத்தில் வக்ரமாகப்போகிறார். வியாழன் கிரகத்தின் பிற்போக்கு நிலை அதன் தலைகீழ் இயக்கத்தைக் குறிக்கிறது. வியாழன் கிரகம் தனுசு மற்றும் மீனம் ஆகிய இரண்டு ராசிகளின் அதிபதியாக கருதப்படுகிறார். தேவகுரு பிருஹஸ்பதி அடுத்த ஐந்து மாதங்களுக்கு தனது சொந்த ராசியான மீனத்தில் பிற்போக்குத்தனமாகச் செல்வார். வியாழனின் பிற்போக்கு இயக்கத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். குருவின் வக்ர நிலையால் எந்தெந்த ராசிகளுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூலை 29 முதல் குரு பகவானின் வக்ர நிலை சுப பலன்களை தரும். வருமானம் கூடும். செல்வம் பெருகும், வசதிகள் அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

மேலும் படிக்க | ஆகஸ்ட் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு வியாழனின் பிற்போக்கு கட்டத்தில் சிறப்பு அருள் இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் ஆன்மீக நிகழ்வுகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் அமையும், பதவி உயர்வும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கௌரவம் உயரும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு வியாழனின் பிற்போக்கு சஞ்சாரம் சாதகமாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். குடும்பம் மற்றும் மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். முடங்கி இருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த வித பிரச்சனையும் வராது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் ஏகப்பட்ட சுப பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நேரம் உங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வேலை மாற்றம் சாத்தியமாகும். பண வரவால் நன்மை உண்டாகும்.

மீனம்:

வக்ர நிலையில் உள்ள குரு பகவானால் மீன ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். கடினமாக உழைப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருமானம் கூடும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.  இந்த பயணம் அனுகூலமான நன்மைகளை அள்ளித்தரும்.

மேலும் படிக்க | மூன்று ராசிகளுக்கு அடிக்குது ஜாக்பாட்! கவலை வேண்டாம் கன்னி ராசிக்காரரே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News