சாம்பியன்ஸ் டிராபி : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அடுத்த அடியை கொடுத்த பிசிசிஐ

India pakistan Cricket News: சாம்பியன்ஸ் டிராபி தொடரை இலங்கை அல்லது ஐக்கிய அமீரகத்தில் நடத்துமாறு ஐசிசிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2024, 06:48 PM IST
  • பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி
  • இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை
  • போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றுமாறு கோரிக்கை
சாம்பியன்ஸ் டிராபி : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அடுத்த அடியை கொடுத்த பிசிசிஐ title=

Indian Cricket Team News Tamil : சாம்பியன்ஸ் டிராபி கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் டாப் 8 இடங்களைப் பிடித்திருக்கும் அணிகள் பங்கேற்க இருக்கின்றன. அதன்படி, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெறவில்லை. இந்த எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாட இருக்கின்றன.

மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபியும் இந்தியாவுக்கு தான்... பிசிசிஐ போடும் பக்கா பிளான் - ஸ்கெட்ச் என்ன?

இதற்கான உத்தேச போட்டி அட்டவணைப் பட்டியலை போட்டியை நடத்தும் பாகிஸ்தான் தயாரித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதனை ஐசிசி பரிசீலித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் பங்கேற்பது குறித்த உறுதியை இன்னும் வழங்கவில்லை. ஏன் என்றால் போட்டித் தொடர் பாகிஸ்தானில் நடக்க இருக்கிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி தேவை. 2007 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுடான இருதரப்பு கிரிக்கெட் உறவுகளை நிறுத்திக் கொண்டது. ஐசிசி தொடர்களைத் தவிர இரு அணிகளும் மற்ற போட்டிகளில் விளையாடுவதில்லை.

இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்வதற்கு இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்காது என தெரிகிறது. இதனை அறிந்து கொண்ட பிசிசிஐ, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தானை தவிர்த்து மற்ற நாடுகளில் நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது. அப்படி நடத்தினால் மட்டுமே இந்திய அணி பங்கேற்கும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் ஐசிசி, இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடக்கும் இடம் முடிவாகும். 

இந்தியாவைத் தவிர மற்ற ஏழு நாடுகளும் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துவிட்டன. பாகிஸ்தான் அணியும் கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதி நேரத்தில் மட்டுமே பங்கேற்க ஒப்புக்கொண்டது. அத்துடன் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தானுக்கு வரும் என்ற ஒப்புதலைக் கொடுத்தால் மட்டுமே பங்கேற்போம் என தெரிவித்திருந்தது. அதற்கான இசைவை ஐசிசி அப்போது தெரிவித்ததால், அந்த அணி இந்தியாவுக்கு வந்து 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய நிலையில், இப்போது இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல தயார் இல்லை என அறிவித்திருக்கிறது. 

மேலும் படிக்க | 'இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்...' விராட் கோலி இல்லை - ஆண்டர்சன் சொன்ன அந்த வீரர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News