பரபரப்பு! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கு கொரோனா!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸின் (CSK) மூன்று உறுப்பினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 3, 2021, 03:56 PM IST
பரபரப்பு! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கு கொரோனா!  title=

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸின் (CSK) மூன்று உறுப்பினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

CSK தலைமை நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் பஸ் கிளீனர்கள் ஆகியோரின் கொரோனாவின் அறிக்கை சாதகமாக வெளிவந்துள்ளது என்று கிரிகின்ஃபோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அணியின் மீதமுள்ள உறுப்பினர்களின் அறிக்கை நெகட்டிவ் ஆகிய உள்ளது.

 

 

ALSO READ | IPL 2021-ல் நுழைந்தது கொரோனா: இன்றைய KKR vs RCB போட்டி ஒத்திவைப்பு!! 

கொரோனா மத்தியில் வீரர்களுக்கு உரிய பாதுகாப்புடன் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதால் ஐபிஎல் தொடர் முழுமையாக நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

முன்னதாக கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்ப்பட்டுள்ளது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர் (KKR) அணிகளுக்கு இடையேயான இன்றையப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலைியல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூவருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ: Covid 19க்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவ Cricket Australia இத்தனை கோடி ரூபாய் நன்கொடை!

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News