CSK vs KXIP: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெறித்தனமான வெற்றியை பதிவு செய்த CSK..!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி..!

Last Updated : Oct 5, 2020, 06:13 AM IST
CSK vs KXIP: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெறித்தனமான வெற்றியை பதிவு செய்த CSK..!  title=

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி..!

2020 ஐபிஎல் (IPL 2020) தொடரின் 18-வது லீக் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசியது. பஞ்சாப் அணி அதிரடியாக பேட்டிங் செய்தது. சிஎஸ்கே அணிக்கு 179 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. அதை CSK அணியின் வாட்சன் - டுபிளெசிஸ் மட்டுமே அடித்து பஞ்சாப் அணியை வீழ்த்தினர்.

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடியில் மயங்க் அகர்வால் 26 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய மன்தீப்சிங் 27(16) ரன்களும், நிகோலஸ் பூரன் 33 (17) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே,எல்.ராகுல், தனது அரைசதத்தை பதிவு செய்தநிலையில் 63(52) ரன்களில் கேட்ச் ஆனார்.

ALSO READ | IPL 2020: சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்திய RCB.. வெற்றி குறித்து கோலி கூறியது என்ன? 

இறுதியில் மேக்ஸ்வெல் 11(7) ரன்களும், சர்ப்ரஸ் கான் 14(9) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.  முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 63 ரன்கள் எடுத்தார். சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன் மற்றும் பிளெஸ்சிஸ் தொடக்கம் முதல் அடித்து ஆட தொடங்கினர்.  இதனால் அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது.  வாட்சன் 83, பிளெஸ்சிஸ் 87 ரன்கள் எடுத்திருந்தனர்.  இதில் சாதனை அளவாக இரண்டு பேட்ஸ்மேன்களும் 53 பந்துகளை சந்தித்திருந்தனர்.  இருவரும் 11 பவுண்டரிகளை விளாசினர்.

வாட்சன் 3 சிக்சர்களும், பிளெஸ்சிஸ் 1 சிக்சரும் விளாசியிருந்தனர்.  சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்தது.  இதனால், இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Trending News