முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்த வாஷிங்டன் சுந்தர்

தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்.

Last Updated : Dec 13, 2017, 07:51 PM IST
முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்த வாஷிங்டன் சுந்தர் title=

மொகாலியில் நடைப்பெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவ் காயம் அடைந்ததால் கடைசி நொடியில் இவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட வாஷிங்டன் சுந்தர், தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்தார். இலங்கை அணியின் வீரர் லஹுரு திருமன்னே விக்கெட்டை வீழ்த்தினார். 

தமிழகத்தில் நடைப்பெற்ற TNPL கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் மற்றும் விக்கெட் எடுத்ததன் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News