குவாலிபைர் 1 சென்னை vs மும்பை: மீண்டும் பைனலுக்குள் நுழைய தயராகும் CSK

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் என்பதால், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையே போட்டி மிகவும் பலமாக இருக்கும். 

Written by - Shiva Murugesan | Last Updated : May 7, 2019, 06:21 PM IST
குவாலிபைர் 1 சென்னை vs மும்பை: மீண்டும் பைனலுக்குள் நுழைய தயராகும் CSK title=

சென்னை: IPL 2019 தொடரின் முதல் குவாலிபைர் போட்டி இன்று சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ரோஹித் தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.

ஐபிஎல் சீசன் 12 தொடரின் அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்து, அடுத்த குவாலிபைர் போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. மும்பை, சென்னை, டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளது. 

முதல் இரண்டு இடங்களில் உள்ள மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையே முதல் குவாலிபைர் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும். தோல்வியை தழுவும் அணி இரண்டாவது குவாலிபைர் போட்டிக்கு செல்லும். 

அதேபோல நாளை மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நாக்-அவுட் போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெறும் இரண்டாவது குவாலிபைர் போட்டிக்கு தகுதி பெரும். இதில் வெற்றி பெரும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும்.

இன்று வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் என்பதால், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையே போட்டி மிகவும் பலமாக இருக்கும். 

ஏற்கவே 2019 ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான இரண்டு லீக் போட்டிகளில் சென்னை அணி தோல்வியை தழுவியுள்ளது. சென்னை அணி தோல்விக்கு பதிலடி தருமா? இல்லை, லீக் போட்டியில் வெற்றி பெற்றது போல, இந்த போட்டியிலும் மும்பை அணி வெற்றி பெறுமா? என்று இன்று இரவு தெரியும்.

Trending News