ரிஷப் பன்ட் கூட அவரு எப்போதும் டச்ல தான் இருக்காரு - நாசர் ஹூசைன்

காயத்தில் இருந்து குணமடைந்து வரும் ரிஷப் பன்ட் என்ன செய்கிறார் என்பது குறித்து ரிக்கி பாண்டிங் அப்டேட்டாக இருக்கிறார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 10, 2023, 08:39 PM IST
  • ரிக்கி பாண்டிங்குடன் நிறைய பேசினேன்
  • அவர் பன்ட் உடன் தொடரில் உள்ளார்
  • உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார்
ரிஷப் பன்ட் கூட அவரு எப்போதும் டச்ல தான் இருக்காரு - நாசர் ஹூசைன் title=

இந்திய அணி கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு ஐசிசி கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றாமல் இருப்பது இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. தோனி தலைமையிலான இந்திய அணி மூன்று வகையான ஐசிசி கோப்பையும் வென்ற பின்னர் அடுத்து வந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலைமையில் பல்வேறு கோப்பைகளை இந்திய அணி தவற விட்டது.

அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இரண்டு முறை முன்னேறியும் அந்த இரண்டு வாய்ப்புகளிலுமே இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வலுவான அணியாக இந்திய அணி திகழ்ந்தும் கோப்பையை தவறவிட்டது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | 2023ல் அதிக தனிநபர் ஒருநாள் ஸ்கோரைப் பெற்ற டாப் 10 பேட்டர்கள்

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் தற்போது இந்திய அணியில் இல்லாதது இந்திய அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என நாசர் ஹுசைன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “நான் ரிக்கி பாண்டிங்குடன் ஆசஷ் தொடரின் போது நிறையவே நேரத்தை செலவிட்டேன். அப்போது நானும் ரிக்கி பாண்டிங்கும் நிறைய பேசிக்கொண்டோம். அந்த சமயத்தில் ஒருமுறை ரிக்கி பாண்டிங் ரிஷப் பந்த்க்கு தனது மொபைல் போன் மூலம் மெசேஜ் அனுப்பி எங்கே இருக்கிறாய்? என சில நலம் விசாரித்தார்.

அப்போது, தான் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளதாகவும், காயத்திலிருந்து மெல்ல மெல்ல முன்னேறி வருவதாகவும் ரிஷப் பந்த் தெரிவித்திருந்தார். இந்திய அணியை பொருத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப்பந்த் இடம் பூர்த்தி செய்யப்பட முடியாத ஒன்று. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் வெளிநாட்டு மண்ணில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய இழப்புதான். 

அதேபோன்று இந்திய அணியில் பேட்டிங் தெரிந்த ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வேண்டும். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸும், ஆஸ்திரேலியா அணிக்கு மிட்சல் மார்ஷ், கேமரூன் க்ரீன் இருப்பது போன்று இந்தியாவிற்கு ஹார்டிக் பாண்டியாவால் அந்த இடத்தை பூர்த்தி செய்ய முடியும். அவர் தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். எனவே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தலாம்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | டீம் இண்டியாவை வீழ்த்தி ODI உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்லும்! பாக் வீரர் கணிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News