கங்குலியை சீண்டிய வீரேந்திர சேவாக்!!

Last Updated : Feb 3, 2017, 04:08 PM IST
கங்குலியை சீண்டிய வீரேந்திர சேவாக்!! title=

வீரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியை காமெடியாக சீண்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரர் வீரேந்திர சேவாக். இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் முன்னாள் கேப்டன் கங்குலி. அதை சேவக்கே பலமுறை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கங்குலியை தாதா என்று அழைப்பதும் வழக்கம்.வீரேந்திர சேவாக் டுவிட்டர் தனது கருத்துகளை தெரிவித்து வருவது வழக்கம். 

இந்நிலையில் தனது சமுக வலைதளத்தில் கங்குலியை வைத்து காமெடி செய்துள்ளார் சேவக். இன்று வீரேந்திர சேவாக் வெளியிட்ட டுவிட்:-

முதல் டுவிட்: பாண்டா கரடியின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு, அதில், உங்களுக்கு தெரிந்த கண்ணாடி அணிந்த நண்பரின் கண்ணாடிகளை எடுத்து விட்டால், அவர் இப்படி தான் பார்ப்பார் எனவும்....

 

 

இரண்டாம் டுவிட்: எனக்கு இரண்டு கங்குலியை தெரியும் ஒன்று தாதா கங்குலி, மற்றொன்ரு சீனா கங்குலி, கண்ணை சிமிட்டி சிமிட்டி, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வாணவேடிக்கை நிகழ்த்தும் அவரை மறக்கவே முடியாது. என குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

இதுவரை இந்த டுவிட்டுக்கு கங்குலி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

Trending News