தூத்துக்குடியில் 3 நாட்களுக்கு பின் பேருந்துகள் இயக்கம்!

தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு போலீஸ் பாதுகாப்புடன் மூன்று நாள்களுக்கு பின் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது!

Last Updated : May 25, 2018, 10:07 AM IST
தூத்துக்குடியில் 3 நாட்களுக்கு பின் பேருந்துகள் இயக்கம்! title=

தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு போலீஸ் பாதுகாப்புடன் மூன்று நாள்களுக்கு பின் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி  100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளதால் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

நேற்று முன்தினம் மீண்டும் துப்பாக்கிச் சூடும் , தடியடியும் நடத்தப்பட்டது. இதனால் அரசியல் கட்சிகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆட்சியரும், மாவட்ட எஸ்.பி.யும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்தால் கடந்த மூன்று நாட்களாக அரசு பேருந்துகள் இயக்கபடாமல் இருந்தது. இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு போலீஸ் பாதுகாப்புடன் மூன்று நாள்களுக்கு பின் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது!

இதையடுத்து இன்று கன்னியாகுமரியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டங்களை சுற்றியுள்ள 4 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Trending News