கவனக்குறைவான அறுவை சிகிச்சையால் பார்வை இழந்த சிறுவனுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

ஸ்ரீவில்லிப்புத்தூர் கவனக்குறைவான அறுவை சிகிச்சையால் பார்வை இழந்த சிறுவன்.... 20 வருடங்களுக்குப் பிறகு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 6, 2022, 05:40 PM IST
  • பார்வை இழந்த சிறுவன் - வழக்கு
  • மருத்துவமனை மேற்கோள்காட்டிய காரணம்
  • 20 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு
கவனக்குறைவான அறுவை சிகிச்சையால் பார்வை இழந்த சிறுவனுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு  title=

இராஜபாளையம் அருகே சோழபுரத்தைச் சேர்ந்தவர் முக்கையா. இவர் தனது மகனான அர்ஜுனனைக் கடந்த 2002 ஆம் ஆண்டு தளவாய் புரத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமிற்கு அழைத்துச் சென்று கண் பரிசோதனை செய்துள்ளார். 

சிறுவனுக்கு பார்வை குறைபாடு அங்குள்ள மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்த்துள்ளார். 

தொடர்ந்து சிறுவன் அர்ஜுனனுக்கு மருத்துவமனையில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை நடைபெற்ற வீடு திரும்பிய நிலையில் அவரது பார்வை குறைபாடு சரியாகவில்லை. தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர் அறுவை சிகிச்சை செய்தும் மேற்படி சிறுவனுக்கு பார்வை கிடைக்கவில்லை. 

இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறுவனின் கண்ணைப் பரிசோதித்த நிலையில் சிறுவனுக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டு பார்வை இழந்து இருப்பது தெரியவந்தது. 

இதனை அடுத்து சிறுவனின் தந்தை மூக்கையா விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு வழக்குச் செலவு நஷ்ட ஈடு உட்பட 10 லட்சம் ரூபாயை தனியார் கண் மருத்துவமனை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க | CRIME : கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மாணவர் - வேலூரில் அரங்கேறிய பயங்கரம்!

இவ்வழக்கு குறித்து தனியார் கண் மருத்துவமனை தாக்கல் செய்துள்ள இறுதி மனுவில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுவன் அறுவை சிகிச்சைக்கு பின் தொடர் மருத்துவ பரிசோதனைக்கு வராததால் தான் பார்வை பறிபோய் உள்ளது என்று மேற்கோள்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜாமின் வேணுமா? அப்போ திருமணம் செஞ்சிட்டுவா! நீதிமன்றத்தில் நடந்த விநோதமான திருமணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News