களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு: துவக்கிவைத்தார் ஈ.பி.எஸ்., ஒ.பி.எஸ்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது.

Last Updated : Jan 16, 2018, 08:09 AM IST
களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு: துவக்கிவைத்தார் ஈ.பி.எஸ்., ஒ.பி.எஸ்! title=

உலக புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்க உள்ளது. தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவா ராவ் ஆகியோரின் மத்தியில் உறுதிமொழிகள் ஏற்க்கப்பட்டது. இதையடுத்து, காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு தாயார் நிலையில் இருக்கிறது. 

ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆயிரத்திற்கு மேற்பட்ட காளைகள், 1241 வீரர்களுக்கு டோக்கன் தரப்பட்டுள்ளது. காளை, வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை தர மருத்துவக் குழு தயார்நிலையில் உள்ளது. 7 கிராமத்து மரியாதைக் காளைகள் முதலில் களத்தில் இறக்கி விடப்பட்டன. 

பத்து மருத்துவ குழுக்கள் அமைக்கபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்து வருகிறது. அவற்றை பிடிக்க மாடுபிடி வீரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கியும் வருகிறார்கள்.

காளைகளின் திமிலை பிடித்தே அடக்க வேண்டும். 15 மீட்டர் தூரத்திற்குள் பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை கருத்தில் கொண்டு வீரர்கள் செயல்பட்டு வருகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், இதனை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்து உள்ளனர். அவர்கள் விசில் அடித்தும் பலத்த கரகோஷம் எழுப்பியும், வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே உள்ளனர்.

பார்வையாளர்களுக்காக இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காளைகளுக்கும் வீரர்களுக்கும் அடிபடாமல் இருப்பதற்காக தேங்காய் நார்கள் போடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களும், மொபைல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் காவல் ஆணையர் நேரடி கண்காணிப்பில் 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியி்ல் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காலை 8 மணிமுதல் மாலை 3 மணி வரை நிகழும் என்றும் தெரிவித்துள்ளனர். 

Trending News