வேட்புமனு தாக்கல் நிறைவு: அக்டோபர் 3 இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்

இன்றுடன் நாடு முழுவதும் நடைபெறவிருந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அக்டோபர் 3 ஆம் தேதி வெளியிடப்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 30, 2019, 08:40 PM IST
வேட்புமனு தாக்கல் நிறைவு: அக்டோபர் 3 இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் title=

சென்னை: தமிழகத்தில் நாங்குநேரி (Nanguneri), விக்கிரவாண்டி (Vikravandi) மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் (Kamaraj Nagar) தொகுதிகளுக்கு அடுத்த மாதம் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் (ByElections) நடைபெற உள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுக + அதன் கூட்டணி கட்சியும், அதேபோல திமுக + அதன் கூட்டணி கட்சியும் போட்டியிடுகிறது. இந்த இரண்டு கட்சியை தவிர நாம் தமிழர் கட்சியும் (Naam Tamilar Katchi) களத்தில் இறங்கியுள்ளது. இடைத்தேர்தலில் தங்கள் பலத்தை நிருப்பிக்க திமுக (Dravida Munnetra Kazhagam) மற்றும் அதிமுக (All India Anna Dravida Munnetra Kazhagam) பல வியூகங்களை வகுத்து வருகிறது. இரண்டு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட தயாராகி வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளான இன்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். கடந்த 23 ஆம் தேதி (திங்கட்கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி காமராஜ் நகர் (Kamaraj Nagar) தொகுதி:

இந்த தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மேலும் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. அக்கட்சியின் சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் இருக்கும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சியின் சார்பாக புவனேஸ்வரன் போட்டியிடுகிறார். இந்த இரண்டு கட்சிகளையும் எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவினா மதியழகன் போட்டியிடுகிறார். 

நாங்குநேரி (Nanguneri) தொகுதி:-

இந்த தொகுதியில் அதிமுக சார்பாக வெ.நாராயணனும், அதேபோல திமுக கூட்டணியில் உள்ள காங்கிரெஸ் சார்பாக ரூபி மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக இந்த தொகுதியில் சா.ராஜநாராயணன் வேட்பாளராக களம் காண்கிறார்.

விக்கிரவாண்டி (Vikravandi) தொகுதி:

அதிமுக சார்பாக எம்.ஆர். முத்தமிழ் செல்வனும், திமுக சார்பில் விக்கிரவாண்டியில் புகழேந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக கு.கந்தசாமி போட்டியிடுகிறார்கள்.

மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று கடைசி நாள் என்பதால், இதுவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யாதவர்கள் அனைவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். நாங்குநேரி தொகுதியில் 36 பேரும், விக்கிரவாண்டி தொகுதியில் 23 பேரும், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 18 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

நாளை தாக்கல் செய்யப்பட வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். அக்டோபர் 3 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப்பெறும் கடைசி நாளாகும். அதன் பிறகு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும். அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்தள்ளது.

Trending News