தாம்பரம் டூ ராஜபாளையம் - பிரபல ரவுடி சைலுவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை போலீசார்... யார் இவர்?

Chennai Crime News: தாம்பரத்தை சேர்ந்த பிரபல A++ ரவுடி சைலு (எ) சைலேந்தர் தனிப்படை காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Written by - Tamil Arasan | Edited by - Sudharsan G | Last Updated : Nov 30, 2023, 12:33 PM IST
  • சைலு ஒரு கொலை செய்துவிட்டால் தலைமறைறைவாகி விடுவாராம்.
  • இவர் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் நெருங்கிய கூட்டாளி.
  • நெடுங்குன்றம் சூர்யா சமீபத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகியாக பொறுப்பேற்றார்.
தாம்பரம் டூ ராஜபாளையம் - பிரபல ரவுடி சைலுவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை போலீசார்... யார் இவர்? title=

Chennai Crime News: தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல A++ ரவுடி சைலு என்கிற சைலேந்தர்.  இவர் மீது சேலையூர், பீர்க்கங்கரணை, சங்கர்நகர், கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, குன்றத்தூர், மணிமங்கலம், MM நகர், திருவள்ளூர் ஊத்துக்கோட்டை போன்ற பல காவல் நிலையங்களில் 6 கொலை வழக்குகள் உள்பட 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கொலை, கட்டப்பாஞ்சாயத்து, ஆட்கடத்தல், தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூலிப்பது என தொடர்ந்து குற்ற வழக்குகளில் ஈடுபட்டு அடுகடுக்கான குற்ற வழக்குகள் இவர் மீது குவிந்துள்ளது. காவல் துறையினரின் மறைமுக பார்வை என்பது இவர் மேல் அதிகமாகி கொண்டே இருந்தது எனலாம்.  

எனினும் இவர் A++ சரித்திர படிவெடு ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் முக்கியமான ரவுடி ஆவார். சுமார் நான்கு வருடங்களாக போலீசார் கைகளில் சிக்காமல் போலீசாருக்கே போக்கு காட்டி விட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கொலை செய்துவிட்டால் இவர் தலைமறைறைவாகி விடுவாராம். பின்னர் இவரை அவ்வளவு எளிதில் யாராலும் பிடிக்க முடியாது என்று காவல் துறையை சார்ந்த பலரும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | சமூக ஆர்வலரை கொலை வெறியுடன் தாக்கிய கும்பல்!

இந்நிலையில்  ரவுடி சைலேந்தர் மதுரையில் பதுங்கி இருப்பதாக தாம்பரம் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசாரின் குழுவானது அங்கு விரைந்து சென்றுள்ளனர்.  மதுரையை அடுத்த ராஜபாளையத்தில் வைத்து தனிப்படை காவல்துறையினரால் அதிரடியாக கைது A++ ரவுடி சைலேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் தமிழ்நாடு பாஜகவில் இணைந்து, அதன் மாநில பட்டியலின பிரிவு செயலாளராக பதவி ஏற்றிருக்கும் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் நெருங்கிய கூட்டாளி மற்றும் அவருடைய வலது கரம்தான் இந்த ரவுடி சைலேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடிகள் சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் ஆகியோரின் தலைவனாக இருந்தவர் சைலு என்ற சைலேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரை தனிப்படை காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடிகளை அடக்குவதற்கு காவல்துறை பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ரவுடி சைலேந்தரின் இந்த அதிரடி கைது நடவடிக்கையானது குற்ற செயல்களில் ஈடுபடும் அனைத்து ரவுடிகளையும் கதி கலங்க வைத்துள்ளது எனலாம். 

மேலும் படிக்க | ரவுடி மேத்யூ வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News