மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம்: தமிழக மின்வாரியம்

மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 26, 2021, 07:53 PM IST
மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம்: தமிழக மின்வாரியம் title=

மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.,

கொரோனா பரவுதலை (Coronavirus) கட்டுப்படுத்தும் பொருட்டு மே 10 ஆம் தேதி மே 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக மே 24 முதல் மே 31 முடிய தளர்வுகளற்ற முழு ஊரடங்கு (Lockdown) தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதன் காரணமாக, மின்நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

ALSO READ | உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

* தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 ஆம் தேதி மே 31 ஆம் தேதி வரை இருக்குமாயின், அத்தொகையினை 15.06.2021 வரை மின் துண்டிப்பு/மறு இணைப்புக் கட்டணமின்றி செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

* மேலும், ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள இணையதளவழி மூலம் வலைதள வங்கியியல், கைபேசி வங்கியியல், டெபிட்/கிரெடிட் கார்டு, பிபிபிஎஸ் (BBPS) முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்தி மின்கட்டண கவுண்ட்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு மின்பயனீட்டாளர்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

* மே 10 ஆம் தேதி மே 31 ஆம் தேதி வரையிலான காலத்தில் (அதாவது முந்தைய மாத கணக்கீட்டிலிருந்து 60வது நாள் இந்த காலத்தில் இருப்பின்) மின்கணக்கீடு செய்ய வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள், மே 2019-ம் ஆண்டில் (கோவிட் இல்லாத காலம் என்பதால்) கணக்கீடு செய்யப்பட்ட தொகையினையே உத்தேச கணக்கீட்டுத் தொகையாக கருதி அந்த கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிய நுகர்வோர்கள் அல்லது அவ்வாறு கணக்கீடு இல்லாதவர்கள் அல்லது மே 2019 மாதக் கட்டணம் கூடுதலாக இருப்பதாக கருதுபவர்கள் மே 2021-க்கான முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி, அதாவது மார்ச் 2021-ன் கணக்கீட்டுப்படி உத்தேச மின் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செலுத்த வேண்டிய உத்தேச மின்கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் முறைபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது மே 2021க்கான உத்தேச கட்டணம் ஜூலை 2021 ஆம் தேதியில் முறைபடுத்தப்படும்.

* ஏப்ரல் 2021 மாத மின்கட்டணம் செலுத்தாத உயர்மின்னழுத்த மின்னிணைப்புகளுக்கு தாமதக்கட்டணத்துடன் கூடிய மின்துண்டிப்பின்றி காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

* சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின்நுகர்வோர்களுக்கான கூடுதல் வைப்புத் தொகை கேட்பு செலுத்த 15.06.2021 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News