தினகரன்-ன் அடுத்த சஸ்பென்ஸ்: பீதியில் அதிமுக அணிகள்!

Last Updated : Aug 19, 2017, 01:19 PM IST
தினகரன்-ன் அடுத்த சஸ்பென்ஸ்: பீதியில் அதிமுக அணிகள்! title=

கடந்த சில மாதங்களாக அதிமுக அடுத்தடுத்து பல சஸ்பென்ஸ்களை மக்களுக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில் அடுத்த சஸ்பென்சை இன்று தினகரன் ஆரம்பித்துள்ளார். 

நேற்று அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பல பரபரப்பு சம்பவங்கள் நடத்து முடிந்த நிலையில் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன், டி.டி.வி தினகரன் ஆலோசனை செய்து வருகிறார். இந்த கூட்டத்தில் அவரது ஆதரவு எம்எல்ஏ.க்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், சுப்பிரமணியம், சுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று வந்து செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத். அணிகள் இணைப்பு என்று பெயரில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கேலிக்கூத்து நடத்திவருகிறனர் என குற்றம்சாட்டினார்.

அணிகள் இணைப்பு குறித்து நல்ல முடிவு வரும் என அதிமுக தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் தற்போது நடந்துவரும் இக்கூட்டம் எத்தகு விளைவை ஏற்படுத்தும் என் புரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Trending News