கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2018, 12:46 PM IST
கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி! title=

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 7-ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமானார். 

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு, அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது பொதுமக்கள் பலரும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கலைஞர் நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அவரது மனைவியுடன் வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றிருந்த அவர் சென்னை திரும்பியதும் கலைஞர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது!

Trending News